முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெறுமை


*“முழுமையான தன்மை மாற்றத்திற்கான முதல் நிபந்தனை என்றால், அது எது?”*


*வெறுமை*


 முன்னொரு காலத்தில், ஒரு இளைஞன், ஒரு (மேஸ்ட்ரோ) இசை மேதையைத் தேடிக் கொண்டு இருந்தான்; இசையில் நிபுணர் ஆக வேண்டும் என்பது அவனது ஆசை; அவனுக்கு மாபெரும் இசை ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. அவரைப் போய் சந்தித்துப் பேசினான், 
 
 நீங்கள் இசைக்கான ஒரு மாபெரும் ஆசிரியர். இசையில் நிபுணத்துவம் அடைந்திட வேண்டும் என்பது, என்னுடைய தீவிரமான ஆசை. சொல்வதானால், உண்மையாக ‘மியூசிக் என்பதே எனது வாழ்க்கை. ஆகவே, உங்களை, தயவு கூர்ந்து, எனக்கு இசையைப் பயிற்றுவிக்கும் படியாக, வேண்டுகிறேன்.”

  பிறகு, இசை ஆசிரியர் சொன்னார்,“ என்னிடம் இருந்து அந்த அளவுக்கான, கற்றுக் கொள்ளும் ஆர்வம், உனக்கு உண்டு என்றால், அப்போது, நான் உறுதியாக உனக்குப் பயிற்றுவிக்கிறேன்.

 இசை மேதையிடம் இளைஞன் கேட்டான், “இதற்காக, நான் பதிலுக்கு என்ன தந்திட வேண்டும்? என்று. 

 ஆசிரியர் சொன்னார், ரொம்ப இல்லை! 100 தங்க நாணயங்கள் மட்டும்
எனக்குக் கொடு!”


 “ 100 தங்க நாணயங்கள்!”, அது மிகவும் அதிகம்; எனக்கு இசை பற்றிய ஞானம் ஏற்கனவே உண்டு.….. பரவாயில்லை;“ நான் உங்களுக்கு 100 தங்க நாணயங்கள் கொடுக்கிறேன்.”

 இதற்கு ஆசிரியரின் பதில், ஏற்கனவே உன்னிடம் கொஞ்சம் இசை தொடர்பான அறிவு உண்டு என்றால், அதன் பிறகு, நீ 200 தங்க நாணயங்கள் தர வேண்டி இருக்கும்.”


 இளைஞன், பெரும் வியப்புடன் வினவினான்,“ மாஸ்டர், அது அதிக ஆச்சரியம்! ஒரு வேளை எனது புரிதலுக்கு அப்பாலும் இருக்கலாம். வேலை குறைந்திடும் போது, விலை எவ்வாறு அதிகமாகிறது?”


 ஆசிரியர் பதில் சொன்னார்,“ வேலை குறைகிறதா, அது எவ்வாறு? முதலாவது, நான் உன்னை மறக்கச் செய்திட வேண்டும்; என்ன கற்றுக் கொண்டாயோ, நினைவில் உள்ள அதனை நீக்கியாக வேண்டும்; அதற்குப் பிறகுதான், நான் புத்தம் புதிய நிலையில் போதிக்க ஆரம்பிக்க வேண்டும்; ஒன்றைப் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் – அது பயனுள்ளதாகவும், முக்கியமானதாகவும் இருக்கிறது என்றால், முதலாவதாக, செய்ய வேண்டியது, மனதை வெற்று நிலைக்கு கொண்டு செல்வது தேவை; அதனைத் தெளிவாக்கிட வேண்டும். இல்லை என்றால் புதிய அறிவை, அது, ஏற்று உள்ளீர்ப்பது என்பது இயலாது.“


 உருவாக்கம் என்பது வளர்ச்சியுற வேண்டும் என்றால், தன்னை உணர்தல் சாத்தியம் ஆக வேண்டும். ஏனெ ன்றால், குறிப்பாக இது மிகவும் முக்கியமானது; காரணம் என்னவென்றால், “ஏற்கனவே நிரம்பி இருக்கும் கண்டெயினரில், இன்னும் வேறு எதனையும் போட்டு நிரப்புவது என்பது சாத்தியம் அற்றது.“அறிவு இல்லாமல் இருப்பது நல்லது; அரைகுறையான அறிவு கொண்டிருப்பதை விட! கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், வெறுமையானது எப்போதுமே தேவையாகும் என்றார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...