முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரத்தன் டாடா பிசினஸ் சாம்ராஜ்யம் கடந்து வந்த பாதை

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் 1937ம் ஆண்டு நாவல் டாடா - சுனு தம்பதியினருக்கு பிறந்தவர் ரத்தன் டாடா.

தனது 10 வயதில் பெற்றோரை பிரிந்து பாட்டியின் வீட்டில் வளர்ந்தவர், மும்பையின் கேம்பியன் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளிகளில் தனது படிப்பை முடித்தார். தொடர்ந்து ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தனது நிர்வாக மேற்படிப்பை 1975ம் ஆண்டு படித்து முடித்தார். படித்து முடித்ததும் இவருக்கு IBMல் வேலை கிடைத்தது. ஆனால், அவருக்கு அமெரிக்காவில் பணிபுரிவதில் விருப்பம் இல்லை. இந்தியாவில் தான் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த ரத்தன் டாட்டா அதே ஆவலுடன் தாய்நாடு திரும்பினார்.

அதனையடுத்து தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். சொந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்டோம் என உடனே அவர் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அடிப்படையான சிறிய பொறுப்புகளிலிருந்தே தன்னை வளர்த்துக்கொண்டவர். சிறிய பொறுப்புகளில் பணிபுரிந்து நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டதால், உழைப்பின் அருமையும், அதிலிருக்கும் கஷ்டத்தையும் அடிமட்டத்தில் அறிந்துகொண்டார். ஏறக்குறைய 30 வருடம் உழைத்தார். டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தார். 1991ல் நிறுவனர் ஜே.ஆர்.டி டாடாவால், டாடா குழுமங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார் ரத்தன் டாடா. அன்றைக்குத் தொடங்கி இன்றைக்கு வரை, டாடா குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைக் கண்டு உலகமே வியக்கும் தலைவராக உருவெடுத்துள்ளார். டாடா நிறுவனத்தில் அவர் பொறுப்பேற்பதற்கு முன்புவரை, டாடா குழுமம் என்பது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனம் மட்டுமே.
அதனை உலக அரங்கில் கொண்டு சென்றவர் ரத்தன் டாட்டா. உலக மார்கெட்டில் மிகப்பெரிய அடிகளை எடுத்து வைத்து டாடா குழுமம் உலகின் மூலை முடுக்கெங்கிலும் தனக்கான வாய்ப்புகளைத் தேடி அலைந்தவர். ஒவ்வொரு நாட்டின் சந்தையிலும் தனி முத்திரை பதித்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்து துறையிலும் தடம் பதித்தார். இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது டாடா குழுமத்தைச் சார்ந்த டிசிஎஸ். கார்களை தயாரிப்பதில் ஆர்வம் அதிகரிக்க, 2008ல் லேன்ட்ரோவர், ஜாக்குவார் நிறுவனங்களின் இந்திய உரிமையை வாங்கினார்.அதே நேரத்தில் வெளிநாட்டில் இந்திய கார்களுக்கு டிமாண்டை உருவாக்கியவரும் இவரே என்றால் அது மிகையில்லை. உலகின் மிகப்பெரிய இரும்பு நிறுவனமான கோரஸ்-ஐ வாங்கி, இரும்பு உற்பத்தியில் உலக அளவில் முண்ணனியில் கொண்டு வந்தார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பு வகித்ததால் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருதும், பத்ம விபூஷன் விருதும் வழங்கி கௌரவித்தது. சாமானியனும் காரில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றி அழகு பார்த்தவர் . அதன் எதிரொலியாக உதித்தது தான் டாடா நானோ திட்டம். வெறும் 1 லட்ச ரூபாயில் கார்களை வெளியிட முன்வந்தது டாடா. ஆனால், அவரின் இந்த முயற்சியை பார்த்து உலகமே சிரித்தது. 1லட்சத்தில் காரா? குறைந்த தரத்துடன், சிறிய விபத்தில் அப்பளமாக நொறுக்கும் வகையில்தான் இருக்கப்போகிறது என பலரும் கேலி பேசினர். அவர்களின் வார்த்தைகளை பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோ கார்கள் ஓடத் தொடங்கின. அவர் அறிவித்ததை காட்டிலும் சற்றே விலை அதிகம் தான். நானோ காரின் விலை 1.25 லட்சம். சற்று கூடுதலாக இருந்தாலும், உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையுடன், நல்ல தரத்துடன் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. பிசினசில் வெற்றிப் பெறுபவர்கள் பெரும்பாலும் பணத்தின் பின் ஓடுபவர்களாகவே இருக்கின்றனர்.

ரத்தன் டாடா பலருக்கும் முன்மாதிரியாய் தொழிலில் பல துறைகளில் சிறக்க நினைத்தாலும் பணம் ஈட்டுவதை முதன்மையாகக் கொண்டு இவற்றை செய்யாததே அவரின் தனிச்சிறப்பு. அதேபோல், டாடா ட்ரஸ்ட் மூலமாக ரத்தன் டாடா முன்னெடுத்துள்ள தொண்டு பணிகள் மற்றும் நன்கொடைகள் சொல்லில் அடங்காதவை. கொரோனாவால் உலகமே திணறிக்கொண்டிருந்த நிலையில், அதை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளுக்காக ரத்தன் டாடா 500 கோடி நிதி ஒதுக்கினார். மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நோயாளிகளின் சிகிச்சைக்காக சுவாசிக்க உதவும் உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள் என பார்த்து பார்த்து நிதியுதவி வழங்கினார்.

தமிழகத்துக்கும் டாடா குழுமம், கொரோனா கண்டறிவதற்காக சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரத்து 32 பிசிஆர் கிட் கருவிகளை வழங்கியுள்ளது. உலகத்தையே தன்னை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒருமுறை ரத்தன் டாடாவிடம், 'நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை?' எனக் கேட்டதற்கு, சிரிப்புடன் இப்படிக்கூறினார், "4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளன" என்றார். உலகச் சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொடுத்ததில் பெரும்பங்கு ரத்தன் டாடாவிற்கு உரியது எனக் கூறினால் மிகையில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...