முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெய்வீகமான தேர்

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️

*தெய்வீகமான தேர் என்றால் என்ன?*

*தேரின் அமைப்பு எதை குறிக்கிறது:-*
*மிகவும் தெய்வீகமான தகவல் அனைவருமே தெரிந்து கொள்வோம்...*
 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
     ✶✶⊷⊷❍ 𝑴.S.Vlr.❍⊶⊷✶✶

தேர் கோண வட்ட வடிவமாக இருக்கும். அதன் நடுவில் சாமியை வைப்பார்கள்

*கடவுள் நம் இதயத்தில் இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.*
(உள்ளத்தில் இறைவன் )

💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷

தேரின் அடியில் ஆறு சக்கரங்கள்
*இது நம் பிறப்பு குழந்தை பருவங்கள்,*
*விடலைப் பருவம் ,*
*இளமைப் பருவம்,*
*முதுமைப் பருவம்*
என ஆறு பகுதிகளை குறிக்கிறது...

🌐🌀💠🔆🔱⚜️🔱🔆💠🌀🌐

 *பட்டரை என்ற மரத்தால் செய்த பாகம் இருக்கும். இதன் நான்கு அடிப்பக்கங்களிலும் பஞ்சபூத பொம்மைகள் முன் பக்கம் பார்த்த மாதிரி பட்டரயை தோள்களில் தாங்கிய மாதிரி இருக்கும்.*

மனிதனின் உடம்பு என்பது
நம் உடம்பு மண், நெருப்பு, நீர், காற்றினால் ஆனது என்பதைக் குறிக்கும்...

🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑

*நான்கு பக்கங்களிலும் இருக்கிற ஐந்து பூதங்கள் மொத்தம் இருபது. நம் உடம்பில் இருக்கிற...*
*ரோமம்,*
*நரம்பு*
*ரத்தம்,*
*சதை ,*
 *எலும்பு,*
*உமிழ்நீர்,*
*வியர்வை,*
*சிறுநீர்,*
*மலம் ,*
*தூக்கம்,*
*தாகம்,*
*பசி ,*
*காமம்,*
*ஓடுவது ,*
*நடப்பது,*
*உட்காருவது,*
*படுப்பது*
*சோம்பல்,*
*உணர்ச்சி*
*முயற்சி*
 *போன்ற இவற்றைக் குறிக்கும்.....*

🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳

பட்டரையில் உள்ள நான்கு பக்கங்களுக்கு ஒரு பக்கத்திற்கு ஐந்தாக இருபது பட்டைகள் இருக்கும்.

*இது ஞான இந்திரியம் ஐந்து*
*காம இந்திரியம் ஐந்து ஆக பத்து.*
*அதன் செயல்கள் பத்து என மொத்தம் இருபது. பட்டரை என்ற இந்த பகுதி ஐந்து அடுக்குகளைக் கொண்டது*

இந்த ஐந்து அடுக்குகளின் வெளிப்பக்கங்களில் அறுபத்து நான்கு சிறு சிறு உருவங்களை செய்து வைத்தார்கள்...
இது மனிதர்களின் 63 அறுபத்து நன்கு கலைகளைக் குறிக்கும்...

🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕

 *பட்டரையின் மேல் மூன்று தட்டுகள் இருக்கும்*.*அடியில் உள்ள தட்டு எண்கோண வடிவத்திலும் மேல் உள்ள *இரு தட்டுகள் சத்ர வடிவிலும் இருக்கும்*_ _*எண்கோண தட்டு நம் உடம்பில் உள்ள கால் இரண்டு கை கண் மார்பு நெற்றி இவற்றைக் குறிக்கிறது.*

இரண்டு சதுரமான தட்டுகளில் ஒரு உயிர்கள் நான்கு விதமான வழியில் உண்டாவதைக் குறிக்கிறது.அடுத்த தட்டு தெய்வீக நிலையை நாம் அடைவதற்கான படிக்கட்டுகளையும் குறிக்கிறது. 

🐘🐘🐄🐄🦚🦚🦚🐄🐄🐘🐘

பட்டரைக்கு மேல் மரத்தால் செய்த பதினாறு தூண்கள் இருக்கும்.இது நாடியைக் குறிக்கிறது.இதன் நடுவில் காலி இடம் .இதில் தான் சுவாமி சிலை (உள்ளத்தில் தெய்வத்தை நிலை நிறுத்து) .நம் இதயத்தில் தெய்வம் உள்ளதைக் குறிக்கும்...

🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥

இந்த தூண்களுக்கு மேல் மெல்லிசான சட்டங்களால் இணைத்து சேர்க்கப்பட்ட நான்கு சதுர அடுக்குகள் 
(நான்கு தெய்வீக வேதங்கள்) 
வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும்... மேலும் 
நான்காவது அடுக்கின் மேல் கலசம். 

(கலசம் தான் சகஸ்ராதார நாடி) 
அது மலர்ந்து தாமரைப் பூ மாதிரி கடைசியில் ஒரு நுனியில் சென்று முடியும்....

*(மலர்வது எல்லாம் ஒன்றாக தோன்றி இறுதியில் ஒன்றுமில்லாமல் ஒரு முனையில் முடிவதைக் குறிக்கிறது)*

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

*தேரில் நான்கு பொம்மை குதிரைகள் தேரை இழுத்து செல்வது போல் இருக்கும்.அந்த நான்கு குதிரைகளின் கடிவாளம் பாகன் கையில் இருக்கு மந்த நான்கு குதிரைகள் உணர்த்தும் மனிதனின் மனம்*
*புத்தி,*
*அகங்காரம்,*
*சித்தம்*
*இவற்றைக் குறிக்கும்....*

*கடிவாளங்கள் நம் அறிவு. பாகன் நம் மனசாட்சி.மனசாட்சிக்கு பயந்து அறிவாள் நாம் நான்கு குதிரைகளை நல்வழியில் ஓட்டி சென்றால் நல்ல ஆன்மா நல்வழிப்படும்...*

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️

தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது...

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*தேர்களில் புராணக்கதை தொடர்பான சிற்பங்கள், குறிப்பாக சைவக் கோயில் எனில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும்...*
*வைணவக் கோயில் எனில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டுள்ளன...*

*சில தேர்களில் சைவம், வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன...*

🧿🧿📿📿🪔🪔🪔📿📿🧿🧿

தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்திருக்கும். சிற்றுருச் சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும்...


தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர்...

தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும்...

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

தேரின் பீடத்தில் கிராமிய நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்...

 *இந்தியாவிலும், இலங்கையிலும் மற்றும் நேபாளம் இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக இது அமைகின்றது...*

🐘🐘🐄🐄🦚🦚🦚🐄🐄🐘🐘

*கோயில்களைப் பொறுத்துப் 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை பல நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய திருவிழாக்களில் இறுதியான தீர்த்தத் திருவிழாவுக்கு முதல் நாள் தேரோட்டத் திருவிழா இடம்பெறுவது வழக்கம்...*

🌐🌀💠🔆🔱⚜️🔱🔆💠🌀🌐

*இத்திருவிழாவில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து தேர்கள் இடம்பெறுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்கள் இடம்பெறும் போது கோயிலின் தலைமைக் கடவுளுக்குப் பெரிய தேரும், பிற கடவுளருக்கு முக்கியத்துவத்தில் அடிப்படையில் சிறிய தேர்களும் இருக்கும்...*

*உங்கள் நல்லாசியுடன் மேலும் பல ஆன்மீக சேவைகள் தொடரும்...*

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️

*இனி தேர் காண்கின்ற பொழுது...*
*தெய்வீக அம்சங்களை உணர வேண்டும் அது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதன் என்கின்ற உண்மையான தத்துவத்தை தெய்வீக அம்சமும் உணர்ந்து கொள்ள வேண்டும்...*

🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑

*"ஆன்மீகம் என்பது ஒரு வார்த்தைகள் அல்ல*
*மனிதனின் வாழ்வியல்"*

*நமது முன்னோர்கள்........*
*உருவாக்கித் தந்த இந்து தர்மத்தையும் அதன் கலாச்சாரத்தையும் வருகின்ற இளைய தலைமுறை பின்பற்ற வேண்டும்.!*
*முக்கியமாக பாதுகாக்க வேண்டும்!*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
     ✶✶⊷⊷❍ 𝑴.S.Vlr.❍⊶⊷✶✶

*வாழ்க இந்து தர்மம்!*
*வாழ்க தமிழ்மொழி!*
*வாழ்க பாரதம்!*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*என்றும் இறைபணியில்...*
*மு.சண்முக ஐயப்பன்.மும்பை*
🟪🟦🟩🟧🟨⬜🟨🟧🟩🟦🟪

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...