முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீவில் வசிக்கின்ற பருந்துகள்


  கடலின் நடுவில் இருக்கும் தீவு ஒன்றில், ஒரு முறை ஒரு கூட்டமாக பருந்துகள் வந்து சேர்ந்தன. அந்தக் கடலில் நிறைய மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்தன. இந்தக் காரணத்தால், அந்தப் பருந்துகளுக்கு உணவு, தண்ணீர் பற்றாக்குறை இல்லவே இல்லை. அந்தத் தீவில் பருந்துகளைத் தாக்கும் கொடூரமான வனவிலங்குகளும் இல்லை. இது அந்த பருந்துகளுக்கு மிகவும் சிறந்ததாக இருந்தது.    

   இந்த மாதிரியான வசதியான வாழ்க்கையை அந்தப் பருந்துகள் ஒரு போதும் இதற்கு முன்னால் வாழ்ந்தது இல்லை. எனவே பருந்துகள் மிகவும் மகிழ்ச்சியாக அங்கு இருந்தன. அந்தப் பருந்துக் கூட்டத்தில் அதிகமானவை இளம் பருந்துகள்தான். இந்த மாதிரியான ஒரு வசதியான வாழ்க்கையை நாம் எங்கு சென்றாலும், கண்டு பிடிக்க முடியாது. எனவே, நம் வாழ்க்கையின் மீதிப் பகுதியை இங்கேயே கழித்து விடுவோம் என்று அந்த இளம் பருந்துகள் நினைத்தன.    

   அந்தக் கூட்டத்தில் ஒரு வயதான பருந்து இருந்தது. அந்த இளம் பருந்துகளையும், அவர்கள் எண்ணத்தையும் அறிந்த போது, அந்த வயதான பருந்து வருத்தம் அடைந்தது. ஒரு நாள், அந்த வயதான பருந்து எல்லா இளம் பருந்துகளையும் அழைத்து, தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியது. “நாம் இந்த தீவுக்கு வந்து, வாழ்ந்து கொண்டு இருப்பது வெகு காலம் ஆகி விட்டது. நாம் எந்த காட்டில் இருந்து, வந்தோமோ, அதற்கே திரும்பப் போய்விடலாம் என்று நான் நினைக்கின்றேன். எந்தவிதமான சவால்களும் இல்லாமல் நாம் இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அப்படிப் பட்ட சூழ்நிலைகளில் நம்மால் கஷ்டத்தை ஒரு போதும் எதிர்கொள்ள முடியாமல் ஆகி விடும்.   

  அந்த வயதான பருந்து கூறிய வார்த்தைகளுக்கு அந்த இளம் பருந்துகள் செவி சாய்க்கவே இல்லை. வயதானதால், முட்டாள்தனமாக ஏதோ கூறுவதாக நினைத்துக் கொண்டன. வசதியான இந்த வாழ்க்கையை விட்டுவிடுவதற்கு அந்த இளம் பருந்துகள் மறுத்தன.  

  அந்த வயதான பருந்து அந்த இளம் பருந்துகள் அனைவரிடமும் விளக்கமாகக் கூற முயற்சி செய்தது, மேலும் கூறியது: “ நீங்கள் அனைவரும் நான் சொல்வதைக் கவனிக்கா விட்டால், நீங்கள் பறப்பதைக் கூட மறந்து விடுவீர்கள். ஏனெனில், நீங்கள் வசதியான வாழ்க்கைக்கு மாறிவிட்டீர்கள். அதற்கு பழக்கப்பட்டு விட்டீர்கள். சில சமயங்களில் உங்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்னுடன் வந்து விடுங்கள். “ ஆனால் யாருமே இதைக் கவனிக்கவே இல்லை. அந்த வயதான பருந்து தனியாகக் கிளம்பியது. மேலும், அந்த பழையக் காட்டிற்கு தன்னந்தனியாகவே திரும்பி வந்தது.  

    சில மாதங்கள் கடந்தன. அந்த தீவில் வாழும் பருந்துகளைப் போய்ப் பார்க்கலாம் என்று அந்த வயதான பருந்து நினைத்தது. அந்த இளம் பருந்துகள் வசித்துக் கொண்டு இருக்கும், அந்த தீவை அடைந்தது. அங்கு சென்றதும், முற்றிலும் மாறுபட்ட காட்சியை அந்த வயதான பருந்து பார்த்தது. பருந்துகளின் இறந்த உடல்கள் அங்கே எல்லா இடங்களிலும் சிதறிக் கிடந்தன. அவற்றின் நிறைய உடல்கள் இரத்தத்தால் சூழப்பட்டும், மேலும் நிறைய உடல்கள் காயம் அடைந்தும் கிடந்தன.   

  இதைப் பார்த்து அந்த வயதான பருந்து, அதிர்ச்சிக்கு உள்ளாகியது. காயம் அடைந்த ஒரு பருந்திடம் சென்று, “என்ன நடந்தது?” என்று விசாரித்தது. அந்தப் பருந்து, “நீங்கள் இங்கிருந்து போன பிறகு, நாங்கள் இந்த தீவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்தோம். ஆனால், ஒரு நாள் ஒரு கப்பல் இங்கு வந்தது. அந்தக் கப்பலில் இருந்து சிறுத்தைகள் இந்த தீவில் விடப்பட்டன. முதலில் சிறுத்தைகள் ஒன்றுமே செய்ய வில்லை. ஆனால் ஒரு சில நாட்கள் சென்ற பிறகு, நாங்கள் பறப்பதை மறந்து இருப்பதும், மேலும் எங்கள் நகங்கள் மிகவும் மெலிந்து இருப்பதையும் எங்களால் யாரையும் தாக்கவும் முடியாது மேலும் எங்களால் எங்களையே காப்பாற்றிக் கொள்ளவும் முடியாமல் இருப்பதையும் அந்த சிறுத்தைகள் உணர்ந்து கொண்டன. ஆகவே, அவைகள் எங்களை தாக்க ஆரம்பித்தன, எங்களை சாப்பிடத் தொடங்கின. அப்படி இருப்பதால், எங்களுக்கு இந்த நிலைமை வந்து விட்டது. நீங்கள் கூறியதை கவனிக்காமல் இருந்ததால், நாங்கள் இந்த கதிக்கு ஆளாகி விட்டோம்”என்று கூறியது.    

  இப்போதுள்ள கால கட்டத்தில், நாம் எப்போதும் வசதியான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டும், அதிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறோம். நமக்கும், நமது குடும்பத்திற்கும் வசதியான நிலையைக் கொடுக்க நாம் எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால், நாம் ஒன்றைப் பற்றி, எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த வசதியான வாழ்க்கையிலேயே எப்போதும் தங்கி இருக்கும் நம் குடும்பத்தினருக்கு நாம் உண்மையில் அவர்களை, தயார் பண்ணி இருக்கின்றோமா? எதற்கென்றால், எதிர்காலத்தில் வரும் சவால்களை சமாளிக்க! இல்லை என்றால், வசதியான வாழ்க்கையால் அவர்களை வலுவிழக்கச் செய்து விட்டோமா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...