முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நேர்த்தியான எலுமிச்சம்பழ பானம் தயாரித்தல்

என் வாழ்க்கையில் நான் முதன் முதலாக தயாரித்த எலுமிச்சம் பழ ஜுஸ் பற்றி நான் இப்போதும் முழுமையாக, தெளிவாக ஞாபகத்தில் வைத்து இருக்கிறேன்!     

  எவ்வளவு சாறு தேவையோ, அதே போல் 5 மடங்கு சாற்றினை தண்ணீரில் கலந்து விட்டேன். முடிவில் அது முழுவதுமாக வீணாகப் போய் விட்டது. ஆனால் எப்படியாவது அதை சரியாக்க வேண்டும் என முடிவெடுத்தேன்!    

  தண்ணீரில் இருந்து எப்படி எலுமிச்சம் பழச் சாற்றினை எடுத்து அந்த பானத்தை நேர்த்தியான சுவைக்குக் கொண்டு வருவது என விரும்பி முயன்றேன். ஆனால் ஐயோ, என்னால் முடியவே இல்லை …..சில விஷயங்களை எப்போதுமே செய்ய முடிவது இல்லை. சிலவற்றை ஒரு போதுமே மாற்ற முடியாது. தண்ணீரில் இருந்து அதிகப்படியான எலுமிச்சம்பழச் சாறை எடுப்பது பற்றி நான் சிந்திப்பதற்கான வழியே இல்லை.

  ஆகவே, இதற்கான தீர்வுதான் என்ன? இந்த ஜுஸை சம நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், அதனுடன் 5 கிளாஸ் தண்ணீரை சேர்த்து, அதிகப் படியான எலுமிச்சம்பழச் சாறை நீர்க்கும்படி செய்து, 5 கிளாஸ் எலுமிச்சம்பழச் சாறை புத்தம் புதியதாக கொண்டு வரலாம். இது ஒன்றுதான் சரியான வழி.

  மேலும் இது என்னை சிந்திக்க வைத்தது……… இந்த மாதிரியான நேரங்கள் வரும் போது, அப்போது நம்மால் சிலவற்றை பழைய நிலைக்கு கொண்டு வர முடியாமல் போகலாம், சிலவற்றை மாற்ற முடியாமல் போகலாம், அல்லது நமது வழிக்கு வரவைக்க முடியாமல் போகலாம். நாம் எவ்வளவுதான், முயற்சி செய்தாலும் பரவாயில்லை, நாம் எவ்வளவுதான் விரும்பினாலும் பரவாயில்லை. சில தவறான முடிவுகள், தவறான தெரிவுகள், தவறான முதலீடுகள், தவறான செயல்கள், தவறான தொடர்புகள், தவறான வார்த்தைகள் அல்லது தவறாக செய்து கொண்டு இருப்பவை என்று எப்போதும் அங்கே இருக்கத்தான் செய்யும்; நாம் மனிதர்களாக இருக்கிறோம், மேலும் தவறு செய்வது மனிதப் பண்பு!

 பிறகு அடுத்தது என்ன?

   சிலவற்றை மாற்ற முடியாத போது, முன்பு நடந்ததைப் பற்றியே புலம்பிக் கொண்டு இருப்பது பயனற்றது. இது தண்ணீரில் இருந்து எலுமிச்சம்பழச் சாறை எடுக்க முயன்றது போன்ற தோல்வியான முயற்சியாகும்! இந்த மாதிரியான நிகழ்வுகளில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அதை ஏற்றுக் கொண்டு அப்படியே சென்று கொண்டு இருக்க வேண்டும். பதிலாக, நாம் நம் வாழ்வில் மிக நல்ல செயல்களை செய்வதில் சுறுசுறுப்பாக ஈடுபடும் போது இந்த தவறான செயல்கள் முக்கியத்துவமற்றதாகப் போய்விடும்! நம்மிடம் அழகான எதிர்மறைகள் நமக்கே என உள்ளன. நம்மிடம் உள்ள குறைபாடுகளை நம்மால் இல்லாமல் ஆக்க முடிவதில்லை. ஆனால் ,
நம்மால் உறுதியாக நேர்மறைகளை நம் வாழ்வில் சேர்த்துக் கொள்ள முடியும். அதன் பிறகு நம்மையும், நம்மைச் சுற்றியும் உள்ள எதிர்மறைகளை நீர்த்துப் போகச் செய்ய முடியும்.  

  நாம் நமது வாழ்க்கையில், சாதாரண மனிதர்களுடனும், குழப்பமான மனிதர்களுடனும் பழகும் சந்தர்ப்பம் நமக்கு கிடைக்கிறது. நம்மை மாதிரியே அடுத்தவர்களையும் மாற்ற முயற்சி செய்வதில், நம் நேரத்தை வீணாக்கக் கூடாது பிறகு நாம் உணர்ச்சிகளுக்கு ஆளாகி நம் சக்தி முழுவதும் வீணாகிப் போய்விடும். இதற்குப் பதிலாக, நமக்கு நல்ல மதிப்பு உள்ளதையும், ஒளிமிக்க பாதையையும் காட்டும் மக்களை நோக்கி நம் கவனத்தை குவித்து, அவர்களுடன் நமது நேரத்தை அதிகமாக செலவிட வேண்டும்.  

  வாழ்க்கையில் எல்லாமே முழுமையாக, நேர்த்தியாக இருக்க முடியாது. அதைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டே, நம் சக்தியை வீணாக்குவதை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக நமது சக்தியை நம்புவதற்கு, உருவாக்குவதற்கு, பற்றுறுதியை வளர்ப்பதற்கு, ஒளிரச் செய்வதற்கு, வெளிப்படுத்துவதற்கு, மேலும் குணப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும்.

   நல்லவற்றை செய்து கொண்டு இருப்பதில் நாம் சுறுசுறுப்பாக இருப்போம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...