முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சரியான தெரிவு

நம் அனைவருக்குமே, வாழ்க்கையில் சில சமயங்களில் மகிழ்ச்சி, மேலும் சில சமயங்களில் வருத்தம், சில நேரங்களில் கஷ்டங்கள், மேலும் சில நேரங்களில் அமைதி ……… இவை எல்லாம் போய்க் கொண்டே இருக்கும். ஆனால் எல்லா சூழ் நிலைகளிலும், நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.  

  ஒரு இனிமையான காலைப் பொழுதில், ஒரு வயதான மனிதரும், அவரது பேரனும் ஒரு ஏரியின் அருகில் உட்கார்ந்து இருந்தார்கள். அவர்கள் இருவரும் பாசத்தோடு பேசிக் கொண்டு இருந்தார்கள். அந்த வயதான தாத்தா, சாதாரண உரையாடல் மூலமாக, தன்னுடைய பேரனுக்கு, வாழ்க்கையின் பாடத்தை கற்பித்துக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். மிக அன்போடு அந்தப் பேரன் தாத்தாவிடம், “தாத்தா, தயவு செய்து ஒரு கதை கூறுங்கள்”என்று கேட்டான். அந்த வயதான மனிதர் புன் சிரிப்போடு கூறினார், “ இன்று, என்னுடைய மனதில், ஒரு சிறிய கதை ஓடிக் கொண்டு இருக்கிறது. “  

 அந்தப் பேரன் மிகவும் ஆர்வத்தோடு கேட்டான், “அது என்ன? “பிறகு தாத்தா பதில் கூறினார், “ எனக்குள் ஒரு போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது”. 

   இரண்டு ஓநாய்களுக்கு இடையே…….. ஒரு கொடூரமான சண்டை ……. அந்தப் பேரன் கேட்டான், “தாத்தா, அது எந்த மாதிரியான சண்டை நடந்தது ?”

  பிறகு தாத்தா விளக்கினார், “ ஒரு ஓநாய் முழுவதுமாக தீமை, கோபம், வருத்தம், பேராசை மேலும் அகங்காரம் இவற்றால் நிறைந்திருந்தது. அடுத்த ஓநாய் நல்லவை, ஆனந்தம், அமைதி, அன்பு, இரக்கம் மேலும் பற்றுறுதி இவற்றால் நிறைந்திருந்தது. இவை இரண்டுக்கும் நடுவில் சண்டை நடந்து கொண்டே இருந்தது. “

  தாத்தா தொடர்ந்தார், “பேரனே, இந்த மாபெரும் யுத்தம் உன்னுள்ளேயும் போய்க் கொண்டு இருக்கிறது, மேலும் உலகத்தில் உள்ள அனைவருள்ளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது”. பிறகு அவர் சிறிது நேரம், அமைதியாக இருந்தார்.   
  திடீரென்று, அந்தப் பேரன் ஒன்றுமே அறியாதவனாக, மேலும் ஆர்வத்துடன், “தாத்தா, எந்த ஓநாய் யுத்தத்தில் வெற்றி பெற்றது?” என்றான்.    

 தாத்தா, புன் சிரிபோடு கூறினார், நாம் எதை ஊட்டி மேலும் எதை வளர்த்துக் கொண்டு இருக்கிறோமோ, அதுதான் வெற்றி பெறும், என் அன்புப் பேரனே. 

  நல்லது, தீயது என்ற இரண்டு ஓநாய்களில் நாம் எதை வளர்க்கிறோமோ அது வெற்றி பெறும். நாம் அனைவருமே வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளின் வழியாக போய்க் கொண்டு இருக்கிறோம். அப்போது நாம் எது நல்லது, எது கெட்டது, என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும், நாம் எந்த சூழ்நிலையை வளர்த்து, நமக்காக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை, முடிவாக நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...