முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்றிலை மாலை சாற்றினால்

 எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.....



வெற்றிலையின் மகிமை :

வெற்றிலை என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமான மங்கள பொருளாகும். சுப நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, அசுப நிகழ்ச்சிகளிலும் கூட வெற்றிலை, பாக்கு சேர்ந்த தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. கோவில்களில் சுவாமிக்கு அத்தனை நைவேத்தியங்கள், பழங்கள் படைத்தாலும், கடைசியாக வெற்றிலை தாம்பூலம் சமர்பித்த பிறகு தான் தீபாராதனை காட்டுவார்கள். தடபுடலாக விருந்திற்கு பிறகு வெற்றிலை பாக்கு போட்டால் மனம் மகிழ்ச்சி அடையும் என்பது ஐதீகம். அதனால் சுவாமியின் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக கடைசியாக தாம்பூலம் சமர்பிக்கும் வழக்கம் உள்ளது. தாம்பூலம் மங்களத்தின் அடையாளமாகும். வெற்றிலை என்பது மகாலட்சுமியின் சொரூபம். இது வெற்றியை தரக் கூடிய பொருளாகும்.

எந்த தெய்வத்திற்கு வெற்றிலை மாலை ஏற்றது?

எந்த தெய்வத்திற்கு வெற்றிலை மாலை ஏற்றது?
கோவில்களில் சுவாமிக்கு வெற்றிலை மாலை சாற்றுவதை பார்த்திக்கிறோம். பலரும் பரிகாரமாக வெற்றிலை மாலை சாற்றுவது உண்டு. ஆனால் முதலில் எந்தெந்த கடவுள்களுக்கு வெற்றிலை மாலை சாற்ற வேண்டும், எந்த முறையில் வெற்றிலை மாலையை, எந்த கிழமையில் சாற்றினால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பதை தெரிந்து கொண்டு, வெற்றிலை மாலை சாற்றினால் அதன் முழு பலனும் கிடைக்கும். முழு முதற் கடவுளான விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றலாம். அதற்கு பிறகு அனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றலாம். வேறு எந்த தெய்வத்திற்கும் வெற்றிலை மாலை சாற்றக் கூடாது. மாறாக வெற்றிலை-பாக்கு தாம்பூலமாக படைத்து வழிபடலாம்.

வெற்றிலை மாலை கட்டும் முறை :

வெற்றிலை மாலை கட்டும் முறை :
வெற்றிலை மாலை கட்டும் போது ஒற்றை படை எண்ணிக்கையிலேயே கட்ட வேண்டும். முதலில் இரண்டு வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் காம்பு பகுதியை கிள்ளி விட்டு, வெற்றிலையின் நடுவில் பாக்கு வைத்து கட்ட வேண்டும். கொட்டை பாக்கு, சுருள் பாக்காக இருந்தால் இரண்டு என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். அது கிடைக்கவில்லை என்றால் பாக்கு தூள் அல்லது சீவல் சிறிதளவு வைத்து மடித்து, அவற்றை மாலையாக தொடுக்க வேண்டும். வெறும் வெற்றிலையாகவோ அல்லது ஒரு வெற்றிலையை வைத்தோ மாலை கட்டி போடக் கூடாது.

எந்தெந்த பிரச்சனை தீர வெற்றிலை மாலை மாற்றலாம் ?

எந்தெந்த பிரச்சனை தீர வெற்றிலை மாலை மாற்றலாம் ?
* வீட்டில் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை. படிப்பில் தடுமாற்றம் உள்ளது. ஞாபக மறதி அதிகமாக உள்ளது. படிப்பதை மறந்து விடுகிறான். படிப்பில் கவனம் இருப்பது கிடையாது என சொல்பவர்கள் 9 என்ற எண்ணிக்கையில் வெற்றிலை கட்டுகள் வைத்து மாலை கட்டி விநாயகர் அல்லது அனுமானுக்கு சாற்ற வேண்டும்.

* மகன் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருப்பதில்லை, குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள், சண்டைகள், கோவிலுக்கு செல்ல முடியவில்லை, பூஜை செய்ய முடியவில்லை, மனதில் சஞ்சலமாக உள்ளது என்றால் 11 வெற்றிலையை மாலையாக கட்டி சுவாமிக்கு சாற்ற வேண்டும்.

* வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும், பணக்கஷ்டம் தீர வேண்டும், திருமண தடைகள் விலக வேண்டும், வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெற வேண்டும் என்றால் 21 வெற்றிலைகளை, பாக்குடன் சேர்த்து மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு அணிவிக்க வேண்டும். இதை ஆஞ்சநேயர் மற்றும் குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமையில் சாற்றுவது மிகவும் விசேஷமானதாகும்.

அனைத்து பிரச்சனைகளும் தீர வழிபாடு :

அனைத்து பிரச்சனைகளும் தீர வழிபாடு :
பணக் கஷ்டம், கடன், நோய், திருமணம் தடை, படிப்பில் தடை என அனைத்து பிரச்சனைகளும் வீட்டில் உள்ளது, வீட்டில் நிம்மதியே இல்லை. என்ன செய்தால் இந்த ஒட்டுமொத்த பிரச்சனையும் தீரும் என்பவர்கள் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு 108 வெற்றிலை கொண்ட மாலை சாற்றி, தயிர் சாதம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். என்ன பிரச்சனையாக இருந்தாலும் அது தீர வேண்டும் என்றால் வெற்றிலை மாலை சாற்றி விட்டு 21 நாட்கள், ஆஞ்சநேயரை 11 முறை வலம் வர வேண்டும்.தொடர்ந்து 21 நாட்களோ அல்லது 21 சனிக்கிழமைகளோ 108 வெற்றிலை மாலைகளை சாற்றி விட்டு, அனுமனை 11 முறை வலம் வந்து வழிபடுங்கள். குடும்பத்துடன் சென்று வழிபடுவது சிறப்பானதாகும். சுவாமியிடம் எந்த பிரச்சனையையும் சொல்லி முறையிடாமல், 11 முறை வலம் வரும் போதும் ராம், ராம் என்ற மந்திரத்தை ஆஞ்சநேயரை மனதில் நினைத்து சொல்லியபடியே வலம் வர வேண்டும். இப்படி செய்தால் இந்த வேண்டுதல் முடிப்பதற்குள் உங்களின் பிரச்சனைகளை ஆஞ்சநேயர் தீர்த்து வைப்பார்.✍🏼🌹

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...