முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்பிக்கை மற்றும் பற்றுறுதி


 நம்பிக்கை மற்றும் பற்றுறுதி இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம்: 


  இந்த உலகமே பற்றுறுதியின் அடிப்படையில்தான் இருக்கிறது.
இந்தப் பழமொழியை நாம் அனைவருமே கேட்டு இருப்போம், ஆனால் நாம் இந்த சிறிய கதையின் மூலமாக, பற்றுறுதியின் உண்மையான மற்றும் பொருத்தமான எடுத்துக் காட்டைப் புரிய முயற்சி செய்கிறோம்.    

  ஒரு முறை, தெருக் கூத்து ஒன்றில், இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடங்களின் இடையில் கட்டப்பட்டு இருக்கும் ஒரு கயிற்றின் மேல், கையில் ஒரு நீளமான ஒரு மூங்கில் கம்புடன், ஒரு கழைக் கூத்தாடி நடந்து கொண்டு இருந்தார். அவருடைய மகனையும் கூட தோள்களில் சுமந்து கொண்டிருந்தார். நூறு மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ச்சியோடு இதைக் கவனித்துக் கொண்டு இருந்தனர். தன்னுடைய மற்றும் தன் மகன் உயிரையும் பணயம் வைத்து கடுமையான காற்றோடு போராடிக் கொண்டு, நிலையான அடிகளை எடுத்து வைத்து, அந்தக் கழைக் கூத்தாடி அந்த தூரத்தைக் கடந்து கொண்டிருந்தார்.

  அவர் கடந்து முடிந்ததும், அந்தக் கூட்டம் மகிழ்ச்சியாலும், ஆச்சரியத்தாலும் குதித்தது. அங்கு நிறைய கை தட்டல்களும், விசில் சத்தங்களும் இருந்தன. மக்கள் கழைக் கூத்தாடியைப் படம் எடுத்துக் கொண்டனர். அவரோடு சேர்ந்து ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். அவரது கைகளை குலுக்கினர். அந்தக் கழைக் கூத்தாடி மைக் முன் சென்று, நின்று கூட்டத்தைப் பார்த்து, “நான் இதை திரும்பவும் செய்வேன் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.

  அந்தக் கூட்டத்தினர், சத்தமாகக் கூறினர், “ ஆமாம், ஆமாம்” உங்களால் முடியும்.   

  அவர் திரும்பவும் கேட்டார், “நீங்கள் உண்மையாக இதை நம்புகிறீர்களா?" 

  அந்தக் கூட்டத்தினர், முழு உற்சாகத்தோடு சத்தமிட்டனர், “எங்களுக்கு, முழு நம்பிக்கை இருக்கிறது”. நீங்கள் திரும்பவும் வெற்றிகரமாக செய்வீர்கள் என்பதற்கு நாங்கள் ‘பெட்’ கட்டக் கூட தயாராக இருக்கிறோம் என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.    

  அந்தக் கழைக் கூத்தாடி கூறினார், “உங்களுக்கு முழு பற்றுறுதி இருக்கிறது, அப்படித்தானே? “ அந்தக் கூட்டம் ‘ஆமாம்’ என்று கத்தியது. பிறகு அந்த கழைக் கூத்தாடி அமைதியாகக் கூறினார், “ ஓ.கே. தயவு செய்து யாராவது ஒருவர் உங்கள் குழந்தையை என்னிடம் தாருங்கள். நான் அந்தக் குழந்தையை என் தோள்களில் சுமந்தவாறே கயிற்றில் நடக்கப் போகிறேன்.”

  கழைக் கூத்தாடி இந்த வார்த்தைகளைக் கூறிய அந்த நேரத்திலேயே, உடனடியாக அங்கு முழுமையான அமைதி நிலவியது. அந்தக் கழைக் கூத்தாடி கூறினார், பயப்பட்டு விட்டீர்களா? ஒரு கணத்திற்கு முன்னால், நீங்கள் அனைவரும் நான் இதை செய்து முடிப்பேன் என்ற பற்றுறுதியோடு இருந்தீர்கள். ஆனால், இப்போது என்ன நடந்து விட்டது? உண்மையிலேயே, நீங்கள் என்னை நம்புகிறீர்கள். ஆனால், உங்களுக்கு முழுமையான பற்றுறுதி இல்லை. இந்த இரண்டுக்கும் இடையே வேறு பாடு உண்டு. 

  இந்தக் கதையின் மூலமாக, நாம் நம்பிக்கைக்கும், பற்றுறுதிக்கும் இடையே உள்ள சூட்சுமமான வேறுபாட்டை புரிந்து கொள்ள முடிகிறது. 

  மக்கள் அதிகமானோர் வலியுறுத்திக் கூறுகிறார்கள். என்னவென்றால், அவர்களுக்கு அவர்களது குரு அல்லது வழிகாட்டியின் மேல் முழுமையான பற்றுறுதி இருக்கிறது. ஆனால், இது உண்மையான, முழுமையான பற்றுறுதியா? நாம், உண்மையிலேயே நமது குரு அல்லது வழிகாட்டியை தொடர்ந்து கொண்டு வருகிறோம் என்றால், பிறகு ஏன் நமக்கு அதிக அளவில் கோபம் மற்றும் டென்ஷன் வருகிறது?    

  ஒரு சிறிய குழந்தை தன் அம்மா அல்லது அப்பாவுடன் இருக்கும் போது, அவனுக்கு அவர்கள் மீது முழு பற்றுறுதி இருக்கிறது. ஆகவே அந்தக் குழந்தை ஒவ்வொரு கணத்திலும், பேரானந்த நிலையில் இருக்கிறது. முழு பற்றுறுதி வைத்திருக்கும், நமது குரு அல்லது வழிகாட்டி இவர்களுடன் நாம் இருந்தும், பிறகு நமது மகிழ்ச்சி எங்கே போனது?

சிறிது சிந்தியுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...