முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருப்பு பெல்ட்

*கருப்பு பெல்ட் வாங்குவதன் பொருள் என்ன?*

 ஒரு தற்காப்பு கலைஞன் பல வருடங்களாக கடினமாக பயிற்சி செய்தான். அவன் கருப்பு பெல்ட் வாங்குவதற்கு தகுதியுடையவனாக தேர்ந்தெடுக்கப் பட்டான். அந்த பெல்ட் அவனுக்கு ஒரு கராத்தே ஆசிரியரால் (Sensei – Karate Teacher in Japanese ) விழா ஒன்றில் கொடுக்கப் படுவதாக இருந்தது. அந்த விழா அன்று அந்த இளம் கலைஞன் கருப்பு பெல்டை பெறுவதற்காக அந்த ஆசிரியர் முன்பு வந்தான்.
பெல்டைப் பெறுவதற்கு முன்பு, உனக்கு மற்றொரு தேர்வு வைக்கப் போகிறேன் என்றார் ஆசிரியர்.  

“நான் தயாராக இருக்கிறேன்” என்று அந்த இளைஞன் எந்தவித தயக்கமும் இன்றி, முழுமையான நம்பிக்கையுடன் பதில் கூறினான். யாருடனாவது போட்டியிடச் சொல்வார் என அவன் நினைத்தான். ஆசிரியர் மனதில் வேறு ஏதோ இருப்பதை அவன் அறியவில்லை.  

 தேர்வு என்னவென்றால், ஆசிரியர் அவன் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் என விரும்பினார். இந்த கருப்பு பெல்டை பெறுவதன் உண்மையான பொருள் என்ன? --இதுதான் கேள்வி.

 “என்னுடைய பயணத்தின் முடிவில், என்னுடைய கடின உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி “ என்று இளைஞன் பதில் கூறினான்.   

 இந்த பதிலுக்கு ஆசிரியர் திருப்தி அடையவில்லை. அவர் சொன்னார், “நீ இன்னும் கருப்பு பெல்ட் வாங்குவதற்கு தகுதியுடையவன் ஆகவில்லை. ஒரு வருடம் கழித்து திரும்பி வா“ என்றார்.

 ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த இளைஞன் திரும்பவும் கருப்பு பெல்ட் பெறுவதற்காக வந்தான். இந்த முறையும் ஆசிரியர் அதே கேள்வியை திரும்பவும் கேட்டார். “இந்த கருப்பு பெல்டை வாங்குவதன் உண்மையான பொருள் என்ன?” . 

 “இது இந்த கலையின் சிறந்த சாதனைக்கான அடையாளம் “ என்று இளைஞன் பதில் கூறினான்.     

 ஆசிரியர் இப்போதும் திருப்தி அடையவில்லை. அவர் அந்த இளைஞனிடம் இருந்து கூடுதலான பதிலை எதிர்பார்த்தார்; அந்த இளைஞன் அமைதியாக இருந்தான்.

 “நீ இன்னும் கருப்பு பெல்ட் வாங்குவதற்கு தயாராக இல்லை. இப்போது போய் விட்டு அடுத்த வருடம் வா” என்று கூறி அந்த இளைஞனைத் திருப்பி விட்டார். 

 ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த இளைஞன் திரும்பவும் ஆசிரியர் முன் வந்தான். அந்த ஆசிரியர் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார்.   

 “ இந்த கருப்பு பெல்டை வாங்குவதன் உண்மையான பொருள் என்ன? “. 

 “ஒரு போதுமே முடிவுறாத ஒரு பயணத்தின் தொடக்கமே இந்த கருப்பு பெல்ட். ஒழுக்கம், கடின உழைப்பு, முன்னால் இருந்ததை விட மேலும் சிறந்ததாக ஆவதற்கு வலுயுறுத்துவது – ஆகிய மூன்றும் இதில் அடங்கியுள்ளன என்று முழு நம்பிக்கையுடன் இளைஞன் பதில் கூறினான்.

 இறுதியாக, ஆசிரியரின் கண்களின் பிரகாசம் தெரிந்தது; அவர் எதிர்பார்த்த பதிலை அந்த இளம் கலைஞரிடம் இருந்து பெற்று விட்டார். முகத்தில் புன் சிரிப்போடு ஆசிரியர் கூறினார்,“ மிகவும் சரியான பதில்! இப்போது கருப்பு பெல்டை வாங்குவதற்கு நீ தகுதியுடையவனாகி விட்டாய். இப்போது இந்த மதிப்பு மிக்க பரிசை எடுத்துக் கொண்டு, உன்னுடைய வேலையை நன்கு செய்வாயாக” என்று வாழ்த்தினார்.    

 நண்பர்களே, சில சமயங்களில் மிகப்பெரிய சாதனைக்குப் பிறகு, நாம் ஒரு சிறிய அளவு அகங்காரத்திற்கு ஆளாகி அமைதி அடைகிறோம். புகழ் அல்லது சாதனையின் உச்சியை சென்று அடைவது எளிது; ஆனால் அந்த வெற்றியில் நிலையாகத் தங்கி இருப்பது எளிதல்ல. இதற்குக் காரணம் அந்த அகங்காரம்தான். வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்றால் கடின உழைப்பு மட்டும் போதாது. அத்துடன் ஒழுக்கம், உள்ளார்ந்த பணிவை வளரச் செய்தல், இதயத்தில் நன்றியுணர்வு இவையாவும் இன்றியமையாதவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...