முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரத்தினங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன?

ஒரு சமயம் நீதிமன்றம் அதன் வீரர் ஒருவருக்கு தண்டனை விதித்தது; அவர் அரைக் கிலோ சுண்ணாம்பை உண்ண வேண்டும், என்பதே தண்டனை. வெற்றிலை பாக்கு போடும் போது, சுண்ணாம்பு சிறிது அளவு பயன்படுகிறது என்றாலும், ஒரே நேரத்தில் அரைக் கிலோ சுண்ணாம்பை வாயில் போட்டு சாப்பிட்டாக வேண்டும் என்றால், அவ்வாறு சாப்பிடுபவர் உயிர் பிழைப்பது சாத்தியம் அற்றது. ஆகவே, அவர் உறுதியாக ஒரு மாபெரும் தவறினை செய்திருக்க வேண்டும். 

 அந்த வீரர் சுண்ணாம்பை வாங்கி வர வேண்டும்; அடுத்த நாள் நீதி மன்றத்தில் முழுவதுமாக வாயில் போடப்பட்டாக வேண்டும்; ஆகவே அவர் ஓரு வெற்றிலை பாக்குக் கடைக்கு, அதனை வாங்குவதற்கு சென்றார். ஆனால், இவ்வளவு அதிகச் சுண்ணாம்பை அவர் கேட்டவுடன் கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார்.

 கடைக்காரரின் மனதில் கொஞ்சம் சந்தேகம் எழுந்திடவே, இவ்வளவு அதிக அளவிலான சுண்ணாம்பு வாங்குவதன் காரணத்தை கேட்க ஆரம்பித்தார். அந்த வீரர் சோகமான குரலில், “அடுத்த நாள் அவ்வளவு சுண்ணாம்பையும் நான் வாயில் போட்டு சாப்பிட்டாக வேண்டும். இதுதான் தண்டனை” என்றார்.  
 கடைக்காரர் வீரரிடம், “பிரச்சனையே இல்லை. அது தொடர்பாக நான் உனக்கு உதவுகிறேன். முதலில் சென்று ஒரு அரைக்கிலோ நெய் கொண்டு வா “ என்றார்.

 வீரருக்கு ஒரு நம்பிக்கைக் கீற்று தென்பட்டது. அவர் உடனே சென்று நெய்யை வாங்கினார்.    

 அரைக் கிலோ சுண்ணாம்பினை வீரரிடம் கொடுக்கும் போது, கடைக்காரர் அவருக்கு ஒரு அறிவுரைக் கொடுத்தார். “நீதி மன்றம் புறப்படும் முன்பாக, இந்த நெய்யை குடித்து விட்டு கிளம்பு; அதற்குப் பிறகு, உனது தண்டனையின் படி, அங்கே சுண்ணாம்பை சாப்பிடு. உடனடியாக எந்த விதமான தாமதமும் இன்றி வீட்டுக்குத் திரும்பிவிடு; இது உன்னைக் காப்பாற்றும்.“

 இப்போது, நீரில் மூழ்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனுக்கு ஒரு மிதக்கும் குச்சி கிடைத்தது!

 மிகுந்த நம்பிக்கையோடு வீரர் வீடு சென்றார். அடுத்த நாள் கடைக் காரர் கூறியபடி அவர் அப்படியே செய்தார். அரைக் கிலோ நெய்யைக் குடித்துக் கொண்டார்; வீட்டை விட்டு கிளம்பினார். நீதிமன்றம் மக்களால் நிரம்பப்பட்டு இருந்தது. தண்டனையின் படி, அவர் அரைக்கிலோ சுண்ணாம்பை அவர்கள் முன்னிலையில் சாப்பிட்டு விட்டார். சுண்ணாம்பைத் தின்று முடித்ததும், அவரது தண்டனை நிறைவேற்றப் பட்டு விட்டது; வாழ்க்கையின் இறுதிக் கணங்களை அவர் தன் குடும்பத்துடன் சேர்ந்து இருப்பதற்காக, அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.       

 வீடு சென்றவுடன், நெய்யும் சுண்ணாம்பும் கலந்த எல்லாவற்றையும் வாந்தி எடுத்தார். சற்று பலவீனமாக இருப்பதை அவர் உணர்ந்தார்; என்றாலும் அடுத்த நாள் காலை, எல்லாமும் சரியாகி விட்டது. ஆகவே அவரது வழக்கப்படி, வேலைக்காக நீதி மன்றம் வந்து சேர்ந்தார். முந்தைய நாள் சுண்ணாம்பைத் தின்றவர் எவ்வாறு இப்படி உயிர் பிழைத்தார் என்று அனைவருமே திகைப்புற்றனர். அரண்மனை முழுவதும், இந்த செய்தி விரைந்து பரவியது; அக்பரையும் அந்த விஷயம் சென்று சேர்ந்தது.

 அக்பருக்கும் மிகுந்த ஆச்சரியம்; உடனடியாக அந்த வீரரை சபைக்கு அழைத்தார்; வீரர் வந்தார். நேர்மையாக கதை முழுவதையும் வீரர் விவரித்துக் கூறினார். கடைக்காரர், நெய் மற்றும் வாந்தி இவற்றைப் பற்றி விளக்கினார்.     


 கடைக்காரரின் முன்னோக்கு திறன், விவேகம் பற்றி அக்பர் திகைப்புற்றார். அவர் கடைக்காரரை தனது சபைக்கு வரவழைத்தார்; அத்துடன் நில்லாது, அவரை தனது ராஜ்ய சபையில் ஒரு உறுப்பினர் ஆக்கினார். “வாஸிர் – இ – அஸாம் “ என்ற பதவியை வழங்கினார்.    


 அந்தக் கடைக் காரரின் பெயர், “மகேஷ் தாஸ்”. அந்தப் பெயரை அக்பர், “பீர்பால்” என்று மாற்றினார். அதன் பொருள் “வலிமையான மனம் கொண்ட மனிதர் “. மிகுந்த விருப்பத்துடன், பீர்பால் அக்பர் அவையில் உள்ள நவரத்தினங்களில் ஒருவரானார்.

 இது மட்டுமல்லாது, ஒரு நாள் அவருக்கு ‘அரசர்’ என்ற பட்டமும் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.    

 வாழ்க்கையில், நமது முன்னேற்றம் என்பது, மெய்யாகவே நாம் எந்த வகையான மக்களை தொடர்பு கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது; காரணம் என்னவென்றால், நமது சுற்றுச் சூழல் நேரடியாக நமது வாழ்க்கையின் முறையை பாதிக்கிறது; நமது வாழ்க்கை முறை, நமது விதியை வடிவமைக்கிறது. நாம் பாரபட்சமற்ற பார்வையைக் கொண்டிருக்க வேண்டும்; உண்மையான திறமையை அடையாளப்படுத்த வேண்டும். மேலும் ஒரு பெருந்தன்மையான இதயம், அவற்றை மதித்து, அவற்றை வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...