முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூஃபி ஞானியின் பிரார்த்தனையும் சீடரின் கேள்வியும்

முன்னொரு காலத்தில் சூஃபி மறைஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வழக்கமாக தன் பிரார்த்தனையை இப்படி செய்வார் –“கடவுளே, நீ எனக்கு செய்யும் அனைத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் செய்யும் நன்மைகளை என்னால் எப்போதாவது திருப்பிக் கொடுக்க முடியுமா? நான் நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்”.  

   ஒரு முறை அவர் வெகு தூரம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து மூன்று நாட்களாக அங்கிருந்த மக்கள் இவருக்கு தங்க இடம் கொடுக்க மறுத்தனர். இவர் நல்ல மனிதர் என அவர்கள் நம்பவும் மறுத்தனர். அவருக்கு உணவும், தண்ணீரும் கூட கொடுக்க மறுத்தனர். அந்த மூன்று நாட்கள் முழுவதும் பசியோடும், தாகத்தோடும் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்.   

  மூன்று நாட்களாக பசியும், தாகமும் வாட்டிய போதும் கூட பிரார்த்தனையைத் தொடர்ந்தார். அவர் இரவில்,“ கடவுளே நன்றி ! என்னால் எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும் ? நான், நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்.”
   
 அவருடன் பயணம் செய்த சீடர்களில் ஒருவர், இவர் இவ்வாறு பிரார்த்தனை செய்வதை பார்த்து விட்டு, குருவே, தயவு செய்து நான் சிறிது பேசலாமா? என்றார். நீங்கள் எதற்காக நன்றி கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்? மூன்று நாட்களாக நாம் தங்குவதற்கு இடமும் இல்லாமல், பசியோடும், தாகத்தோடும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறோம். இந்த காட்டு விலங்குகளின் கருணையினால் நாம் இருக்கிறோம். ஆகவே என்ன காரணத்திற்காக நீங்கள் நன்றியுணர்வோடு இருக்கிறீர்கள்?    

   அந்த மறை ஞானி புன்சிரிப்போடு கூறினார், “உன்னால் இதைப் புரிந்து கொள்ள முடியாது - மூன்று நாட்களாக உண்ணவும், குடிக்கவும் ஏதும் இல்லாமல் இருப்பது என்பது, எனக்குக் கண்டிப்பாகத் தேவைப்பட்டு இருக்கிறது. கடவுள் எனக்கு என்ன தேவையோ அதை எப்போதும் கொடுப்பார். இந்த பசியும், தாகமும் எனக்குத் தேவைப் பட்டதால் அதையும் கொடுத்து விட்டார். 

  இந்த மூன்று நாட்களும் எனக்குத் தேவைப் பட்ட நேரமாக இருந்திருக்கிறது, இல்லை எனில் ‘அவர்’ இதை எனக்கு கொடுத்திருக்க மாட்டார். இதற்காக நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.   

 கடவுள் எப்போதுமே என்னைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். என்னுடைய ஆசைகளைப் பற்றி அவர் கவலைப் படுவது இல்லை. எனக்கு எது சரியான தேவை என்பதை உணர்ந்து அதை எனக்குக் கொடுப்பார். 

  நான் அவருக்கு நன்றி கூறிக் கொண்டு இருக்கிறேன். ஏனென்றால், உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல், தங்க இடம் இல்லாமல், மூன்று நாட்களாக பாலை வனத்தில், திறந்த வெளியில், வானத்து நட்சத்திரங்களின் அடியில், தூங்கிக் கொண்டு இருக்கும் போதும் கூட, நம்மை எந்த காட்டு விலங்குகளும் தாக்கவில்லை.

  நீ வருத்தப்படுகிறாயா? எதற்காக? இதுதான் நமது உண்மையான தேவையாக இருந்திருக்கிறது!

  இதுதான், உண்மையான பற்றுறுதி என்பது. இது இதயபூர்வமான நன்றியுணர்வு. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு சூழலையும் மகிழ்ச்சியாக்கிக் கொண்டு வாழ்வதுதான் ஒரு உண்மையான இதயத்தின் பெருந்தன்மையாகும். பெருந்தன்மையான இதயம் கொண்ட ஒரு மனிதனால், தன் வாழ்க்கையின் உண்மையான லட்சியத்தை நோக்கி முன்னேற முடியும்.    

  இப்போது அந்த சீடரின் முகத்தில் திருப்தி தென்பட்டது. லட்சியத்தை நோக்கி முன்னேறுவதற்கான ரகசியத்தை குருவின் இந்த வார்த்தைகள் அவருக்கு வெளிப்படுத்தின. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...