முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு சோதனை

அந்த  பள்ளிக் கூடத்தில் வகுப்பு ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ஒரு சுவை மிக்க சாக்லேட் கொடுத்தார். ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்தார். “குழந்தைகளே,  கவனியுங்கள்! உங்கள் கையில் இருக்கும் சாக்லேட்டை 10 நிமிடங்கள் சாப்பிடாமல் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.” இவ்வாறு கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார்.    

வகுப்பு அறை முழுவதும் ஒரு கணம் அமைதி நிலவியது. எல்லா குழந்தைகளும் தங்கள் முன் இருக்கும் சாக்லேட்டை திகைப்போடு பார்க்கலாயினர்.   சாக்லேட்டை சாப்பிட வேண்டிய ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்தது; அவர்களால் அதைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை;  மிகவும் கஷ்டப்பட்டார்கள்.    


10 நிமிடங்கள் கழிந்ததும்,  ஆசிரியர் வகுப்பின் உள்ளே நுழைந்தார்.    இருக்கும் நிலைமையை ஆய்வு செய்தார்; ஒன்றைக் கண்டு பிடித்தார். ஒட்டு மொத்த வகுப்பில், 7 குழந்தைகள் மட்டுமே சாக்லேட்டை சாப்பிடாமல் அப்படியே வைத்து இருந்தார்கள் மற்ற குழந்தைகள் அனைவரும் சாக்லேட்டை சாப்பிட்டு முடித்த பின், அதன் நிறங்கள் பற்றியும், சுவை பற்றியும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

ஆசிரியர் தனது டைரியில் ரகசியமாக அந்த 7 குழந்தைகள் பெயர்களைக் குறித்துக் கொண்டார். பிறகு பாடம் நடத்த ஆரம்பித்தார்.   அந்த ஆசிரியரின் பெயர்,“வால்டர் மிச்சேல் (Walter Mishchel)”.   சில ஆண்டுகள் கழிந்தன; வால்டர் தனது டைரியைத் திறந்து 7 குழந்தைகள் பெயரையும் எடுத்துக் கொண்டார்; அவர்கள் தத்தம் துறையில் நல்லதொரு வெற்றியைப் பெற்றிருந்தார்கள்.  

அதே போல், அந்த வகுப்பின் மீதி மாணவர்கள்  பற்றியும் விசாரித்தார்; அதில் பெரும்பாலோர் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; இன்னும் சிலர் மிகுந்த கஷ்டத்தில்  பொருளாதார,  சமூக சூழல்களில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்கள்.

வால்டரின் ஆராய்ச்சி, அவரை ஒரு வாக்கியத்துக்கு முடிவாக இட்டுச் சென்றது; அது என்னவெனில் – 
“வெறும் 10 நிமிடங்களுக்குக் கூட பொறுமையாக இருக்க முடியாத ஒரு மனிதனால், ஒரு போதும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியாது”.

இந்த ஆராய்ச்சி,  உலகளாவிய விதத்தில் பெரும் புகழைப் பெற்றது;  அதனை, “மார்ஷ் மால்லோவ் கோட்பாடு  (Marsh Mallow Theory) “  என்று அழைத்தார்கள்.    ஆசிரியர்  வால்டர், அந்தக் குழந்தைகளுக்கு கொடுத்த சாக்லேட்டின் பெயர் “மார்ஷ் மால்லோவ்”.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், எப்போதும் உலகத்தில் உள்ள பெரும்பாலான, வெற்றிகரமான சாதனையாளர் எல்லாம், உருவாக்கப்படுவது “பொறுமை” யின் மூலமே; அத்துடன் வேறு பல குணங்களும் சேர்ந்திடும். ஒரு மனிதனது சகிப்புத்தன்மையை பொறுமை அதிகரிக்கச் செய்து விடுவதால், எவ்வளவு கடுமையான சூழ்நிலைகளிலும்  அவர் துவண்டு போக மாட்டார்; தொடர்ந்து உத்வேகத்தில் இருப்பார்; ஒரு வெற்றிகரமான  மனிதராக ஆகிவிடுவார்.    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...