🙏
இன்று
கிருத்திகை தோரணமலை
முருகன்..!
🦚🙏🦚
****************
கோடி மலைகள்
இருப்பினும்
இம்மலைபோல்
ஆகுமா..?
முருக பக்தர்
மனமெலாம்
வணங்காமல்
போகுமா..?
🦚
"தோரணமலை"
உச்சியில்
கோயில்கொண்டு
வாழ்கிறான்.!
முருகா முருகா
என்போர்தம்மின்
மனதில் வந்து
ஆழ்கிறான்!
🦚
விண்ணைமுட்டும்
மேகங்கள்
இங்கு வந்து
பணியிது.!
பக்த ரோட
ஆசைகள்
இங்குவந்தால்
தணியுது..!
🦚
தாரணியில்
ஈதுமே
தனித்துவம்
மிக்கக்
கோயிலு.!
உலக மக்கள்
போற்றிடும்
ஆன்ம நேய
வாயிலு..!
🦚
சித்தர்கள்வாழும்
செம்மலை..!
வாங்கபோலாம்
இம்மலை..!
குறுமுனியாம்
அகத்தியர்
தேரையரும்
வாழ் மலை...!
🦚
காவடி ஆடிப்
பாடியே..!
நாடும் பக்தர்
ஆழ் மலை.!
ஆன்ற புகழ்
அகத்தியர்
தேரையரும்
சேர்ந்துமே...!
🦚
சித்த
மருத்துவம்
பற்றியே
ஆய்ந்தறிந்த
மாமலை..!
இயற்கைஅன்னை
கொலுவிருக்கும்
எழில்கொஞ்சும்
பூமலை!
🦚
தோரண
மலையைச்
சுற்றியே
இரண்டுநதிகள்
ஓடுது..!
இராம நதியும்
ஜம்பு நதியும்
முருகனை
வணங்கிப்
பாடுது..!
🦚
கால ஓட்டக்
கதியினால்
சுனைக்குள்
முருகன்
போயினன்.!
பல்லாண்டுகள்
ஆகியும்
வெளி வராத
தாயினன்..!
🦚
"முத்து மாலை
புரம் " எனும்
ஊர்வாழும்
சீர்மிகு
பெருமாள்எனும்
ஐயாவின்.!
கனவில் சென்று
முருகனும்
சுனைக்குள்
நானும்
கிடக்கிறேன்..!
🦚
எனை எடுத்து
வழிபட
ஆவன செய்க
என்றனன்..!
உடனெடுத்து
மலையினில்
உச்சிக்குகைக்
கோயிலில்...!
🦚
வைத்துஎல்லாரும்
வணங்கினர்..!
சுற்றி உள்ள
ஊர் மக்கள்
ஒத்துழைக்க
இணங்கினர். !
🦚
பெருமாள் ஐயா
பேரன்.திரு
ஆதி
நாராயணன்
அவர்களின்..!
வம்சாவளி
தொடர்ந்துமே
வாழையடி
வாழையாய்.!
🦚
கோயில் பணி
செய்கிறார்..!
முருகனருள்
பெற்றுமே...!
வளமுடனே
உய்கிறார்..!
இங்கிருந்தே
அகத்தியர்
பொதிகைமலை
சென்றனர்..!
🦚
தேரையர்ஆனச்
சித்தரும்
இங்கிருந்தே
வென்றனர்..!
தேரையர் ஜீவ
சமாதி
இம்மலையில்
இருக்குது..!
வந்து தொழும்
பக்தர்கட்கு.!
🦚
ஐஸ்வர்யம்
கொடுக்குது..!
தோரணமலை
ஏறும் போதே
உடம்பு எல்லாம்
சிலிர்க்கிது..!
மனதில்எண்ணும்
எல்லாமும்
உடனடியாய்ப்
பலிக்கிது..!
🦚
நமக்கு நல்ல
நிம்மதி
இம்மலையில்
கிடைக்கிது...!
திருமணம் கை
கூடுது..!
மக்கட் பேறும்
நாடுது..!
வறுமை எலாம்
ஓடுது..!
🦚
மனம்மகிழ்ந்து
ஆடுது..!
தோரணமலை
மால் மருகா..!
வருக ! வருக !
வருகவே..!
வெற்றி நல்கும்
வேல் முருகா..!
வினைகள்தீர்த்து
அருள்கவே..!
💐🙏💐
அடியேன்
"முருகனடிமை"
விசூர்மாணிக்கம்
05.06.2024.
தினம்ஒருகவிதை
எண்.2090.
முருகா முருகா
🦚🙏🦚
கருத்துகள்
கருத்துரையிடுக