முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கான சந்தர்ப்பம் :

ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி வாழ்ந்து வந்தார். அழகான சிற்பங்களைச் செய்வது அவர் வழக்கம். இந்த வேலையின் உதவியால் கிடைத்த வருமானத்தில், ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தார். சிறிது காலத்திற்கு பிறகு, அவரது மகனும் இதே சிற்ப வேலையை தன்னுடைய இளம் வயதிலேயே செய்யத் தொடங்கினான். அவனது சிற்பங்களும் மிக அழகாகவே இருந்தன. தன் மகனின் தொழில் திறமையைப் பார்த்துத் தந்தை மகிழ்ச்சி அடைந்தார். ஆனாலும் தந்தை, மகனின் ஒவ்வொரு சிற்பத்திலும் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டுவார். அவர் தன் மகனிடம், ‘நீ நன்றாக செய்கிறாய். அடுத்த முறை இந்த குற்றமும் வராமல் பார்த்துக் கொள்ள முயற்சி செய்’ என்று சொன்னார்.

தந்தையின் அறிவுரைக்கு மகன் எதுவும் மறுத்துச் சொல்ல மாட்டார். அப்பாவின் அறிவுரையை பின்பற்றி, தன் சிற்ப வேலையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருந்தார். அதன் விளைவாக, மகனது சிற்பங்கள் தந்தையின் சிற்பங்களை விட மேன்மையுடையதாக ஆகியது . மக்கள் மகனின் சிற்பங்களை அதிக விலை கொடுத்து வாங்கும்படியான நேரமும் வந்து விட்டது. அதே நேரத்தில், தந்தையின் சிற்பங்கள் முன்பு இருந்த அதே விலையில்தான் தொடர்ந்து விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. 

தந்தை தொடர்ந்து தன் மகனின் சிற்பங்களில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தார். ஆனால், இந்த செயல் இப்போது மகனுக்கு மகிழ்ச்சி தர வில்லை. எனவே வழக்கம் போல், அந்த தவறுகளை, மனதில் விருப்பம் இல்லாமல் ஏற்றுக் கொண்டான். ஆனால், தொடர்ந்து அப்பாவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப தன் சிற்பங்களில் அபிவிருத்தி செய்து கொண்டு இருந்தான். 

இறுதியாக மகனின் பொறுமை மிகவும் குறைந்த நிலைக்கு வந்தது. அவனது அப்பா குறைகளைச் சுட்டிக் காட்டும் போது, அவன் அப்பாவைப் பார்த்து ,”நீங்கள் ஒரு சிறந்த சிற்பியாக இருந்தும், உங்கள் சிற்பங்கள் குறைந்த விலைக்கே விற்கப்படுகின்றன. உங்களுடைய அறிவுரை, இனிமேல் எனக்குத் தேவை இல்லை. என்னுடைய சிற்பங்கள் குற்றம் இல்லாமல் மிக ஒழுங்காக இருக்கின்றன” என்றான்.    

மகன் இப்படிக் கூறியதைக் கேட்ட தந்தை அதன் பிறகு, அவனுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்தி விட்டார். சில மாதங்கள், மகன் மகிழ்ச்சியாக இருந்தான். அவனது சிற்பங்கள் முன்பு விரும்பப்பட்டதைப் போல, இப்போது இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தது. அது மட்டுமல்லாமல், சிற்பங்களின் விலையும் உயர்வது நின்று விட்டது. 

அவனால் முதலில் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, தன் அப்பாவிடம் சென்று உதவி செய்யுமாறு கேட்டான். தந்தை மிக அமைதியாக மகனைக் கவனித்தார். இப்படி ஒரு நாள் வரும் என்பதற்காக தயாராக இருந்தார். மகனுக்கும் இது புரிந்தது. அவன் அப்பாவிடம்,‘ இப்படி நடக்கப் போகிறது பற்றி, உங்களுக்கு எப்படித் தெரியும் ?’ என்றான். அதற்கு தந்தை, ‘ஆமாம். இதே சூழ்நிலையை, நானும் எதிர் நோக்கினேன்’ என்றார். மகன், ‘ஏன் அதை என்னிடம் கூறவில்லை ?’ என்றான்.    

தந்தை, ‘ ஏனென்றால், அதைப் புரிவதற்கு நீ விருப்பப்படவில்லை. உன்னைப் போல் நான் நல்ல சிற்பங்கள் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும். சிற்பங்களைப் பற்றிய என் கருத்து தவறாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. என்னுடைய அறிவுரையால், உன்னுடைய சிற்பங்கள் மேன்மை அடைய வேண்டும் என்பதும் இப்போது இல்லை. ஆனால், நான் எப்போது உன் சிற்பங்களில் இருக்கும் குறைகளை, காண்பித்த போது, நீ செய்த செயலில் திருப்தி அடையாமல் இருந்தாய். அதன் பிறகு நீ அதில் அபிவிருத்தி செய்ய முயற்சி செய்தாய். அந்த முயற்சிதான் உன் சிற்பங்கள் மேலும் மேன்மை அடைவதற்கும், அதன் முடிவாக நீ வெற்றி அடைவதற்கும் காரணமாக இருந்தது. இதற்கு மேல் முன்னேற்றம் செய்வதற்கு வாய்ப்பு ஏதும் இல்லை என்று, உன்னுடைய வேலையில் நீ திருப்தி அடைந்து விட்ட அந்தக் கணமே உனது வளர்ச்சி நின்று போய் விட்டது. மக்கள் எப்போதும் உன்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். இதுதான் இப்போது உனக்கு போதுமான அளவு உன் வேலைக்கு புகழ் கிடைக்காததற்கும், உனக்கு போதுமான அளவு பணம் கிடைக்காததற்கும் காரணம் ஆகிறது’ என்றார்.   


மகன் சிறிது நேரம் அமைதியாக இருந்து கொண்டு, அதன் பிறகு அப்பாவிடம்,‘ அப்படியானால் நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?’ என்றான்.

மகனுடைய கேள்விக்கு பதிலாக, அப்பா அளவில் சிறியதாயினும் மதிப்பு மிக்க ஒரு பதிலைக் கொடுத்தார்.“ திருப்தி அடையாமல் இருப்பதற்குக் கற்றுக் கொள்; முன்னேறுவதற்கும், மேன்மை அடைவதற்குமான வாய்ப்பு எப்போதுமே இருக்கிறது என்பதை நீ நம்பு. இந்த ஒன்றுதான் எப்போதும் உன்னை ஊக்கப்படுத்தி, எதிர்காலத்தில் உன்னை முன்னேற்றம் அடையச் செய்யும். எப்போதும் உன்னை மேன்மை அடையச் செய்யும்” என்றார்.


எந்தவிதமான தவறும் செய்யாமல் இருப்பது சாத்தியம் என்கிற கருத்து, முழுமைத்துவம் பற்றிய ஒரு மாயை; அது ஒரு கட்டுக்கதை ஆகும். அடுத்தவர்களின் ஆலோசனைகள், விமர்சனங்கள் இவை இரண்டையும் சமமாக கவனிப்பதில்தான் உண்மையான செயல்திறன் இருக்கிறது. இந்த ஒன்றுதான் முன்னேற்றம் அடைவதற்கான ஒரே வழி ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...