முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று பொம்மைகளின் புதிர்

ஒரு மனிதன் வழக்கமாக ஊர் முழுவதும் சுற்றி பொம்மைகள் விற்பான். அவன் ஒரு நாள், ஒரு ராஜ்ஜியத்திற்கு வந்தான். அந்த நாட்டு மன்னருக்கு புதிய, தனித்துவமான பொம்மைகள் மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்து கொண்டான்.

  எனவே அந்த மனிதன் அரசரின் அரண்மனைக்கு வந்தான். அப்போதுதான் அரச சபை கூடி இருந்தது. அவன் அரசர் முன் வந்து, “மதிப்பிற்குரிய அரசரே, இன்று உங்களுக்கு சில பொம்மைகளை நான் காண்பிக்கப் போகிறேன். இதை இதற்கு முன்பு நீங்கள் எப்போதுமே பார்த்திருக்க முடியாது” என்றான்.

  பொம்மைகளை சபை முன் காட்டுவதற்கு அரசர் அனுமதித்தார்.

  அந்த பொம்மை வியாபாரி தனது பெட்டியில் இருந்து மூன்று பொம்மைகளை வெளியே எடுத்தார். அவை மனித உருவத்திலேயே இருந்தன. அரசர் முன்னே அந்த பொம்மைகளை வியாபாரி வைத்தான். அரசரிடம்,“இந்த பொம்மைகள் தங்களுக்குள் மிகவும் சிறப்புத் தன்மை வாய்ந்தவை. பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், அவைகள் உண்மையிலேயே முழுவதும் வித்தியாசமானவை” என்றான்.   

  அவன் அந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக, சுட்டிக் காட்டி, ”இந்த முதல் பொம்மையின் மதிப்பு 1000 பொற்காசுகள்; இரண்டாவது பொம்மையின் மதிப்பு 100 பொற்காசுகள்; மூன்றாவது பொம்மையின் மதிப்பு ஒரே ஒரு பொற்காசு “ என்றான்.

  அரசர் அந்த மூன்று பொம்மைகளையும் மிக கவனமாக பார்த்தார்; ஆனால் அவற்றுள் எந்த விதமான வேறுபாட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பொம்மைகளின் விலையில் ஏன் இவ்வளவு தூரம் வித்தியாசம் இருக்கிறது என்று அரசர் ஆச்சரியப்பட்டார். 

  அவரால் எதையும் கண்டு பிடிக்க முடியாததால், அரசர் தன் அமைச்சர்களிடம் வித்தியாசத்தைக் கண்டு பிடியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அமைச்சர்களும் எல்லா பக்கங்களிலும் இருந்து பொம்மைகளைப் பார்த்தும், அவர்களால் இந்த புதிருக்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

  அதன் பிறகு அரசர் தன் ராஜ குருவை அழைத்து, நீங்கள் வந்து இந்த பொம்மைகளைப் பாருங்கள் என கேட்டுக் கொண்டார். அந்த ராஜ குரு மிகக் கவனத்தோடு பொம்மைகளைப் பார்த்தார். மூன்று வைக்கோல் குச்சிகளைக் கொண்டு வர உத்தரவிட்டார்.

  வைக்கோல்கள் குச்சிகள் வந்தவுடன் குரு ஒரு வைக்கோல் குச்சியை முதல் பொம்மையின் காதுக்குள், செலுத்தினார். அந்த வைக்கோல் நேராக அந்த பொம்மையின் வயிற்றுக்குள் சென்றதை அனைவராலும் பார்க்க முடிந்தது; சிறிது நேரத்தில் அந்த பொம்மையின் உதடுகள் அசைந்து பிறகு மூடி விட்டன.

  பிறகு ராஜ குரு இரண்டாவது வைக்கோல் குச்சியை எடுத்து அடுத்த பொம்மையின் காதுக்குள் விட்டார். இந்த முறை, அந்த வைக்கோல் அடுத்த காது வழியாக வெளி வந்ததை அனைவரும் பார்த்தனர். வேறு எந்த விதமான அசைவும் இல்லை.

  இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய, மிகவும் ஆவலோடு இருந்தார்கள்.

  இப்போது குரு மூன்றாவது பொம்மையின் காதினுள் வைக்கோல் குச்சியை செலுத்தினார். அந்த பொம்மையின் வாய் உடனே திறந்தது. மூடாமல் நிலையாகவே அசைந்து கொண்டு இருந்தது. அது ஏதோ சொல்வதற்கு விரும்புவது போல வாய் அசைந்து கொண்டே இருந்தது.   

  இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசர் குருவிடம், 
“ இவை எல்லாம் என்ன? இந்த பொம்மைகளின் விலையில் அதிக அளவில் வித்தியாசம் இருப்பது ஏன்? “ என்றார்.  

  அதற்கு குரு,“ நல்ல குண நலன் உள்ள மனிதன் தான் கேள்விப் பட்டதை எப்போதும் தனக்குள் வைத்துக் கொள்வான். அந்த விஷயம் சரியா தவறா என்பதை உறுதிப்படுத்தியப் பிறகே, தன் வாயைத் திறப்பான். அதுதான் அவனது சிறந்த தன்மை. இந்த விவேகத்தைதான் நாம் முதல் பொம்மையிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம். இதனால்தான் அந்த பொம்மையின் மதிப்பு 1000 பொற்காசுகள்.“ 

  சில மனிதர்கள் தங்களைப் பற்றியே நினைத்து எப்போதும் தங்களுக்குள் மூழ்கி விடுவார்கள். மற்றவை எதையையும் கண்டு கொள்ளாமல், அலட்சியம் செய்து விடுவார்கள். எதைப் பற்றியும் அவர்கள் அக்கறை கொள்ள மாட்டார்கள். தங்களை மற்றவர்கள் புகழவேண்டும் என எதிர்பார்க்கவும் மாட்டார்கள். இப்படிப் பட்ட மக்கள் ஒரு போதும் அடுத்தவருக்கு துன்பம் கொடுக்க மாட்டார்கள். இதைத்தான் நாம் இரண்டாவது பொம்மையிடம் இருந்து கற்றுக் கொள்கிறோம். இதனால்தான் அந்த பொம்மையின் மதிப்பு 100 பொற்காசுகள். 

  சில மனிதர்கள் வலுவிழந்த காதுகளும், ஓட்டை வாயாகவும் இருப்பார்கள். எதையாவது கேட்ட பிறகு, அதைப் பற்றி, சுற்றி உள்ளவர்களிடம் உடனே கூறிவிடுவார்கள். தான் கேட்டவை சரியா, தவறா என்று சிறிது கூட முயற்சி செய்து பார்க்காமல், அவர்கள் தவறானதை சமுதாயத்தில் பரவச் செய்து விடுவார்கள். அதாவது, வதந்திகளைப் பரப்பி விடுவார்கள். எனவேதான் இந்த பொம்மையின் மதிப்பு ஒரே ஒரு பொற்காசு.


   கதை கட்ட ஒருவன்
   பிறந்து விட்டால்,
   கண்ணகி வாழ்விலும் 
     களங்கம் உண்டு.
     காப்பாற்ற சிலபேர்
     இருந்து விட்டால்,
     கள்வர்கள் வாழ்விலும்
     நியாயம் உண்டு.

என்ற கவியரசின் பாடல் வரிகள் இந்த பொம்மைகளின் புதிருக்கு நிரூபணம் ஆகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...