முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேறு பட்ட கண்ணோட்டம்

ஒரு ஏழை மனிதன் தன்னுடைய குடும்பத்தினருக்காக, கடினமான முயற்சி எடுத்து ஒரு வீட்டைக் கட்டினான். ஒவ்வொரு ரூபாயாக சிறுகச் சிறுக சேர்த்து, 20 வருடங்களுக்குப் பிறகு வீட்டைக் கட்டி முடிக்கிறான். எனவே, அவரது குடும்பம் அந்த குடிசையில் இருந்து வெளியேறி பெரிய வீட்டில் குடியேறி மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள்.     

   இறுதியாக ஒரு நாள் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு தயார் ஆனது. எல்லோரும் சேர்ந்து ஆலோசித்து, ஒரு விஷேசமான நாளை, புதுமனை புகுவிழாவிற்காக முடிவு செய்தார்கள்.    

   ஆனால், விழாவுக்கு 2 நாட்களுக்கும் முன்னால், ஏற்பட்ட நில நடுக்கத்தால், அந்த வீடு முழுவதுமாக இடிந்து விழுந்து போய் விட்டது.    

   இந்த சம்பவத்தைப் பற்றி தெரிந்தவுடன், அந்த ஏழை மனிதர் மார்க்கெட்டுக்கு ஓடிச் சென்று இனிப்புகள் வாங்கி வந்தார். வீடு இடிந்து கிடந்த இடத்திற்கு இனிப்புகளோடு சென்றார். அங்கு நிறைய பேர் திரண்டு நின்று, அவர்களது வருத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டு நின்றனர். இந்த சம்பவம் நடந்ததற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.     

  “ஓ, இந்த ஏழை மனிதருக்கு இப்படி ஒரு துரதிர்ஷ்டமான செயல் நடந்து விட்டதே? மிகவும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு ரூபாயாக சேர்த்து அல்லவா இந்த வீட்டைக் கட்டி இருக்கிறார்!    

  மக்கள் தங்களுக்குள் வித்தியாசமான கருத்தை விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.    

  அந்த ஏழை மனிதர் அங்கு வந்தார். தனது பையில் இருந்து, இனிப்புகளை எடுத்து எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்தார்.    

  இவரது இந்த செயலைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்!   

   முடிவாக, அவரது நண்பர்களில் ஒருவர் அவரிடம் கேட்டார், “ உனக்கு பைத்தியம் ஏதும் பிடித்து விட்டதா? உன்னுடைய வீடு முழுவதுமாக இடிந்து போய் விட்டது; உன்னுடைய வாழ்நாள் முழுவதுமாக நீ சம்பாதித்த வருமானமும் அப்படியே வீணாகப் போய் விட்டது. ஆனால், நீயோ மகிழ்ச்சியாக இனிப்புகளை கொடுத்துக் கொண்டு இருக்கிறாயே!?” 

   அந்த மனிதர் புன்முறுவலோடு பதில் அளித்தார் ,” நீங்கள் இந்த நிகழ்ச்சியின் எதிர்மறைப் பக்கத்தினை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். நேர்மறைப் பக்கத்தை அல்ல. இந்த வீடு இன்றே இடிந்து விழுந்தது நல்லதுதான். இப்படி இல்லாமல், வேறு மாதிரி எண்ணிப் பாருங்கள் –இந்த வீடு இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்தால், முழு குடும்பமும் அதாவது நான், எனது மனைவி, குழந்தைகள் அனைவருமே அல்லவா இறந்து இருப்போம். அது எவ்வளவு பெரிய இழப்பு ?

  எந்த நிகழ்ச்சியோ, அல்லது விஷயமோ அவற்றிற்கு இரண்டு பக்கங்கள் உண்டு –நேர்மறை அம்சமும், எதிர்மறை அம்சமும். அதை நாம் எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ அதைப் பொறுத்து, அது நம்மை சார்ந்து இருக்கிறது. நமது வாழ்க்கையின் விதியும் அதைப் பொறுத்துதான் அமைகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...