முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளின் மீதுள்ள நம்பிக்கை

ஒரு மனிதன் தன் மகனுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரும் சமுத்திரத்தில், ஒரு படகில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். திடீரென்று மிகப்பெரிய புயல் ஒன்று வந்தது. அந்த மனிதர் ஒரு போர் வீரர். அவர் அப்படியே அமைதியாக இருந்தார். ஆனால் அவரது மகனோ, மிகவும் பயந்து போய்விட்டார். கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்து விட்டவர் போல தோற்றமளித்தார்.அவர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்த படகு மிகவும் சிறியது; மேலும் அந்தப் புயல் உண்மையிலேயே வலிமையுடையதாக இருந்தது. எந்தக் கணத்திலும் அவர்கள் புயலில் மூழ்கி விடுவதற்கான வாய்ப்பில் இருந்தார்கள்.   

  .அதிகமான அளவில் மகன் பயந்து கொண்டு இருக்கும் போது, அவனது அப்பா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். எதுவுமே நடக்காதது போல, முழுவதுமாக அமைதியோடு சலனமற்று இருந்தார்.   


   அந்த நடுங்கிக் பயத்தால் நடுங்கிக் கொண்டே அப்பாவைப் பார்த்து, 
“நீங்கள் பயப்படவில்லையா ? நமது வாழ்க்கையின் கடைசி நேரம் இதுவாகத்தான் இருக்கும்.   

    நாம் இருவரும் கரையை சென்று அடைவோம் என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு அதிசயம் இந்தக் கணத்தில் நடந்து நம்மைக் காப்பாற்றினால் மட்டுமே உண்டு. இல்லையெனில் நாம் மரணமடைவது உறுதி.  

   அவன் தொடரும் போது, ஒரு அலை வேகமாக வந்து படகைத் தாக்கியது. அவன் பயத்தில் கத்தினான். “உனக்கு பயமே இல்லையா ?”

  தன்னுடைய மகனை கவனித்துக் கொண்டிருந்த பிறகு, அப்பா சிரித்தார். அவருடைய வாளை உறையில் இருந்து வெளியே எடுத்தார்.

   அவனுடைய அப்பா செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, இப்போது மகனுக்கு மேலும் வியப்பாக இருந்தது.   


   அப்பா, மகனின் கழுத்துக்கு மிக நெருக்கமாக வாளைக் கொண்டு சென்றார். மிக நெருக்கமாக, வாளுக்கும் கழுத்துக்கும் இடையே மயிரிழை அளவு தூரம்தான் இருந்தது. அந்த வாள் கிட்டத்தட்ட அவன் கழுத்தை தொட்டுக் கொண்டு இருந்தது.    

  இப்போது, அப்பா மகனைப் பார்த்து, “நீ பயப்படுகிறாயா ?” என்று கேட்டார். 

  மகன் சிரித்துக் கொண்டே, “நான் ஏன் பயப்பட வேண்டும்? நீங்கள் என்னுடைய அப்பா. வாள் உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் ஒரு போதும் என்னை துன்புறுத்த மாட்டீர்கள். மேலும், நீங்கள் என்னை நேசிக்கின்றீர்கள்” என்பதுவும் எனக்குத் தெரியும்.  

   அப்பா வாளை மீண்டும் உறையில் போட்டு விட்டு கூறினார், “இதுதான் என்னுடைய பதில், என் அன்பு மகனே! எனக்குத் தெரியும் கடவுள் என்னை நேசிக்கிறார்; இந்த புயலும் அவர் கையில்தான் இருக்கிறது.    

  ஆகவே எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும். நாம் உயிரோடு இருப்பதுவும் நல்லதே, அல்லது இல்லாமல் இருப்பது என்றால் அதுவும் நல்லதே. ஏனென்றால் அனைத்துமே கடவுளின் கைகளில்தான் உள்ளது. அவர் தவறானதை எப்போதுமே செய்ய மாட்டார்.   

  நம்பிக்கையை உருவாக்கிக் கொள். இதுவே வாழ்க்கை முழுவதும் உன்னை தன்மை மாற்றம் அடைய செய்ய தகுதியானது ஆகும். நம்பிக்கை என்றால் முழுமையாக வேண்டும். காரணம் என்னவெனில், அதற்குக் குறைவான எந்த ஒன்றும் பயன் இல்லாதது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...