முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணாடி - உண்மையான அழகு

ஒரு காலத்தில் ஒரு பயணி, பயணம் செய்த களைப்பால் ஓய்வெடுக்க விரும்பினார். சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்கு தகுந்த ஒரு இடத்தை பார்த்துத் தேடிக் கொண்டு இருந்தார்.

 திடீரென்று அவர் கண்களுக்கு ஒரு ‘ஆஷ்ரமம்’ தென்பட்டது. அது மிகச் சிறந்த தத்துவ ஞானியான சாக்ரடீஸின் ஆஷ்ரமம் ஆகும். மிகவும் நல்லது. நான் இங்கு சில நாட்கள் தங்குவதற்கும், உள்ளார்ந்த சிந்தனைகளையும், பேருரைகளையும் கவனித்துக் கேட்பதற்கும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார்.

  இந்த எண்ணத்தோடு அவர் சாக்ரடீஸை சென்று பார்த்தார். அவர் அங்கு தங்குவதற்கு சாக்ரடீஸ் உடனே சம்மதித்தார். அவர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அவரது சொந்த அறைக்கு எதிர் பக்கத்தில் இருந்த அறையை அந்த பயணி தங்குவதற்குக் கொடுத்தார்.    

  ஒரு நாள் அந்தப் பயணி அவர் அறையில் இருந்து வெளியே வரும்போது, எதிர் அறையில் சாக்ரடீஸ் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அதற்கு மிகுந்த கவனமும் கொடுக்கவில்லை.அதைப் பார்த்ததற்காக எந்த வித முக்கியத்துவமும் கொடுக்காமல் தன் வேலையை தொடர்ந்தார்.

   ஆனால், இதே நிகழ்ச்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை நடந்த போது, அவரால் அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மேலும் அவர், சாக்ரடீஸ் அப்படி ஒன்றும் அழகானவர் அல்ல. ஏன் இவர் தினமும் தன்னை வெகு நேரமாக கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்? என்று நினைக்கத் தொடங்கினார். 

  இந்த எண்ணப்புயல் அவர் மீது தாக்குதலை ஏற்படுத்தியது. இறுதியாக அவரை அவரால் நிறுத்த முடியாமல், சாக்ரடீஸின் அறைக்கு நேராகச் சென்றார், “ தயவு செய்து நீங்கள் ஏதும் மனதில் தவறாக எடுக்காமல் இருந்தால், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் அந்த கண்ணாடி முன் வெகு நேரம் ஏன் நிற்கின்றீர்கள்? இருந்த போதிலும் நீங்கள் .. … என்று தொடராமல் நிறுத்தினார். 

  சாக்ரடீஸ் அவரது கேள்வியைப் புரிந்து கொண்டு தொடர்ந்தார், “ஆமாம். நான் அழகில்லாதவன்தான்; பார்ப்பதற்கும் நான் நன்றாக இல்லை. என்னுடைய அழகின்மையை விழிப்புணர்வோடு இருப்பதற்காகத்தான், நான் தினமும் கண்ணாடி முன்னே நின்று வெகு நேரம் பார்க்கிறேன்” என்றார்.

   பயணி – ஏன் உங்கள் அழகின்மையைப் பற்றி தினமும் ஞாபகப் படுத்திட வேண்டும்? அது உங்களுக்கு, ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும் அல்லவா?     

  சாக்ரடீஸ் – இல்லை! நான் எதிர் மறையாக எண்ணவில்லை. என்னுடைய அழகின்மை என்னை விழிப்புணர்விற்கு ஆளாக்கும்.

  பயணி – விழிப்புணர்வா? அது எப்படி?

   சாக்ரடீஸ் – இது என்னை விழிப்புணர்விற்கு இட்டுச் செல்கிறது. என்னுடைய புனிதமான மற்றும் நல்ல செய்கைகள் மூலம் என் அழகின்மையை நான் ஈடு செய்கிறேன்.     

  உயர்ந்த எண்ணங்களும், நல்ல செய்கைகளும் ஒரு மனிதனின் உள் அழகை மேம்படுத்துகின்றன. உள்முக அழகு விழிப்படைந்தால், வெளிப்புற அழகின்மையால் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. 

  மிகச் சிறந்த போதகரான சாக்ரடீஸின் இந்த எண்ணங்களைக் கேட்டு, அந்த பயணி அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து அவரது பாதங்களில் குனிந்து, விழுந்து வணங்கினார். பிறகு எழுந்து அறையை விட்டு வெளியேற புறப்படும் போது சாக்ரடீஸின் குரல் அவரைத் தடுத்து நிறுத்தியது. “மகனே கவனி, நீயும் கூட கண்ணாடியைப் பார்க்க வேண்டும்” என்றார்.    

  அந்தப் பயணி மிகவும் மென்மையான குரலில் ‘ஆம்’ என்றார்.

   சாக்ரடீஸ், “ஏன் என்று தெரிந்திட நீ விரும்பவில்லையா? ஏனென்றால் நீ மிகவும் அழகாக இருக்கிறாய்; நன்றாகவும் இருக்கிறாய். அந்தக் கண்ணாடி உனக்கும் கூட பாடம் கற்றுத் தரும்!” என்றார்.    

  நீ தோற்றத்தில் அழகாக இருப்பதால், அழகான செயல்களை செய்யும்படி, அது உனக்கு ஞாபகப்படுத்தும்.

  உண்மையான அழகு வெளியேயும் இருக்கிறது, உள்ளேயும் இருக்கிறது. உள்முகமான அழகு இல்லை எனில், வெளியே இருக்கும் அழகு அர்த்தம் இல்லாதது மற்றும் நிறைவு அடையாதது என்பதாகும்.     

   வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் இருக்கின்ற போதிலும், நாம் விரும்பினால், நாம் நம்மையே உத்வேகப்படுத்திட இயலும்; உண்மையில் வேண்டியது என்னவெனில், நேர்மறையான எண்ணங்களும், உணர்வுகளும்தான்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...