முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சந்தனக் கட்டையும் கரியும்

ஒரு முறை அரசர் ஒருவர் வேட்டையாட சென்றார்; அதில் மிகவும் மூழ்கியதால், காட்டில் வெகு தூரம் வரைக்கும் சென்று விட்டார். அவருக்கு மிகவும் தாகம் எடுத்தது. தண்ணீரைத் தேடிப்பார்க்கும் போது, ஒரு மரம் வெட்டுபவரை சந்திக்க நேர்ந்தது. அவர் மரத்தில் இருந்து கரி தயார் செய்து கொண்டிருந்தார். அரசர், அவரிடம் சென்று தண்ணீர் கேட்டார். அவரிடம் ஒரே ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் இருந்தது என்றாலும், அதை மகிழ்ச்சியோடு அரசருக்குக் கொடுத்தார்.

  அரசர் மரம் வெட்டுபவரின் மீது முழுவதுமாக திருப்தி அடைந்தார். ஏனென்றால், அரசர் தாகத்தால் மிகவும் தவித்த நேரத்தில் தண்ணீர் கொடுத்து உதவினார் அந்த மரம் வெட்டுபவர். அரசர் அவரிடம்,“ ஓ இரக்கமான மனிதரே! நீங்கள் என் அரண்மனைக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். உங்களுக்கு நான் ஒரு வெகுமதி கொடுப்பேன்” என்றார். அந்த மரம் வெட்டுபவரும் அரசரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். 

  இந்த சம்பவம் நடந்த சில காலத்திற்கு பிறகு, அந்த மரம் வெட்டுபவர் ஒரு நாள் அரண்மனைக்குச் சென்றார். தன்னைத்தானே அரசரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார். “நீங்கள் காட்டில் தாகத்துக்காக தண்ணீர் தேடும் போது, உங்களுக்கு தண்ணீர் கொடுத்த அந்த மரம் வெட்டுபவர் நானே!” என்றார்.    

  அரசர், மிகுந்த உற்சாகத்தோடு அவரை உபசரித்தார். “இந்த ஏழை மனிதருக்கு, நான் என்ன செய்து உதவலாம்?” என எண்ணத் தொடங்கினார். மிகவும் யோசித்த பிறகு, முடிவில் அரசர் ஒரு சந்தன மரத் தோட்டத்தை மரம் வெட்டுபவருக்குக் கொடுத்தார்.

  அந்த மரம் வெட்டுபவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதன் மூலம், தனக்கு போதுமான வருவாய் கிடைக்கும். தன்னுடைய வாழ்க்கையை நடத்துவதும் எளிதாக இருக்கும் என மகிழ்ச்சி அடைந்தார்.

  இவ்வாறாக, அந்த மரம் வெட்டுபவர் இதிலிருந்து அதிகப் பணம், சம்பாதிக்க ஆரம்பித்தார்.

  ஒரு நாள் அரசர், மரம் வெட்டுபவரை சந்தித்து, அவரது நிலைமை எப்படி இருக்கிறது என்பதை சோதிக்க நினைத்தார்; சந்தன மரத் தோட்டத்திற்கு ஒரு உல்லாசப் பயணம் போனது போலவும் இருக்கும். இந்த கருத்துடன், அரசர் சந்தன மரத் தோட்டத்தை நோக்கிப் புறப்பட்டார்.

  ஒரு குறிப்பிட்டத் தூரத்தில் இருந்தே, தோட்டத்தில் இருந்து புகை கிளம்பி வருவதை அரசர் பார்த்தார். மிக அருகில் வந்ததும், சந்தன கட்டைகள் எரிந்து கொண்டிருப்பதையும், அந்த மரம் வெட்டுபவர் அதற்குப் பக்கத்தில் நிற்பதையும் அரசர் பார்த்தார்.

  அரசர், தன்னை நோக்கி வருவதைப் பார்த்த அந்த மரம் வெட்டுபவர் அரசரை வரவேற்க தயார் ஆனார். அந்த இடத்தை அடைந்தவுடனேயே, அரசர் அவரிடம்,“ஓ, நல்ல மனிதரே! நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் !? “என்று கேட்டார். 

  அந்த மரம் வெட்டுபவர் அரசரிடம், “உங்களுடைய நல்லாசியால், நான் மிகவும் வசதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இந்த தோட்டத்தை எனக்குக் கொடுத்து, நீங்கள் மிகப் பெரிய நன்மையை எனக்கு செய்து இருக்கிறீர்கள். இந்த தோட்டத்தில் உள்ள மரங்களில் இருந்து கரி தயாரித்து, அதை விற்றுக் கொண்டு இருக்கின்றேன். இப்போது சிறிதளவில்தான் மரங்கள் இருக்கின்றன. உங்கள் ஆசியால், எனக்கு இன்னொரு தோட்டம் கிடைத்தால், என்னுடைய மீதி வாழ்நாளையும் வசதியாகக் கழித்து விடுவேன் “என்றார்.  

  குறுகிய காலத்திற்கு உள்ளாகவே அந்த அழகான சந்தன மரத்தோட்டம், ஒரு பாலை வனமாக தோற்றம் அளித்ததை அரசர் பார்த்தார். எங்கு பார்த்தாலும், கரிக்குவியல்களாக இருந்தன. இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் மரங்கள் தோட்டத்தில் இருந்தன. அவைதான், இந்த மரம் வெட்டுபவருக்கு நிழல் தரும் நோக்கத்தோடு இருந்தன. 

  அரசர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்; ஆனால், அந்த மரம் வெட்டுபவரிடம், “பரவாயில்லை, நான் இங்கே காத்திருக்கிறேன். மார்க்கெட்டுக்கு சென்று இந்த மரங்களை விற்று வா; கரியை அல்ல “ என்றார். அந்த மரம் வெட்டுபவர் இரண்டு மீட்டர் அளவுக்கான மரத்துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்கு சென்றார். 

  நல்ல தரமான இந்த சந்தனக் கட்டைகளைப் பார்த்து மக்கள் பிரமிப்பு அடைந்தார்கள்; முடிவாக மரம் வெட்டுபவர் அந்த சந்தனக் கட்டைகளை விற்று 300 ரூபாய் கிடைக்கப் பெற்றார். அவர் வழக்கமாக கரிகளை விற்றுக் கிடைக்கும் தொகையை விட இது எத்தனையோ மடங்கு மேலானது.


  மரம் வெட்டுபவர் அரசரிடம் வந்தவுடன் மிகவும் மனம் உடைந்து அழுதார்; தன்னுடைய முட்டாள்தனத்தை ஒப்புக் கொண்டார். தன்னுடைய அறியாமையால், விலை மதிப்பற்ற பொருளை இழந்து விட்டதற்காக ஆழ்ந்த வருத்தம் அடைந்தார். அரசர் அவரை அமைதிப்படுத்தி, இனிமேல் புதிதாக தொடங்குங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.

  இந்தக் கதையில், சந்தன மரத்தோட்டம் நம் உடலைக் குறிக்கிறது; சந்தன மரம் நம்முடைய ஒவ்வொரு மூச்சையும் குறிக்கிறது. நம்முடைய வாழ்க்கை சந்தனக் கட்டை போல மணம் வீசுகிறதா? அல்லது நாமும் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும், வெறுப்பு, தீமை மற்றும் பற்றுகள் போன்ற நெருப்பால் எரித்துக் கொண்டு இருக்கின்றோமா? அந்த மரம் வெட்டுபவர் தன்னுடைய அறியாமையால் சந்தனக் கட்டைகளை எரித்து கரியாக்கியதைப் போல, நாமும் செய்கிறோமா?



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...