முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கதை

ஐன்ஸ்டீனின் "சார்பியல் கோட்பாடு" மிகவும் புகழ் வாய்ந்தது. அப்போது, இந்த கோட்பாட்டைப் பற்றி விளக்கம் தருவதற்காக, அவரை ஒவ்வொரு இடமாக வருவதற்கு அழைப்பு விடுத்தனர். வழக்கமாக, ஐன்ஸ்டீன் காரில்தான் செல்வார். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அவரது டிரைவரும் கூடவே செல்வார். ஐன்ஸ்டீனின் விளக்கக் கூட்டங்கள் நடக்கும் போது, டிரைவர் கடைசி வரிசையில், வழக்கமாக உட்கார்ந்து இருப்பார்.  

 ஒரு விளக்கக் கூட்டத்திற்காக ஒரு நாள் காரில் போய்க் கொண்டு இருக்கும் போது, அவரது டிரைவர், “சார், உங்களுடைய ‘சார்பியல் கோட்பாடு’ மிகவும் எளிமையானது. அதற்கு நான் கூட விளக்கம் கொடுக்க முடியும். நான் இதை நிறைய தடவைகள் கேட்டு இருக்கின்றேன். நீங்கள் உங்கள் கோட்பாட்டை விளக்கும் போது, கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஞாபகம் இருக்கிறது” என்றார்.    

 இதைக் கேட்டவுடன் மனக்குழப்பம் அடைவதற்குப் பதிலாக, ஐன்ஸ்டீன் அதை தனக்குக் கிடைத்த ஒரு பாராட்டாக எடுத்துக் கொண்டார். அறிவியலைப் பற்றி ஏதும் தெரியாமல் இருந்தாலும், தனது டிரைவர் கூட தன்னுடைய கோட்பாட்டை புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி அடைந்தார்.

 தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத அந்த கால கட்டத்தில், ஐன்ஸ்டீன் எப்படி இருப்பார் என்பது மக்களுக்கு உண்மையிலேயே தெரியாது.

 “எனது அடுத்த விளக்கக் கூட்டத்தில் நீதான் கோட்பாட்டை விளக்க வேண்டும்” என்று ஐன்ஸ்டீன் கூறிய போது, டிரைவரும் அதற்கு சம்மதித்தார்.   

 விளக்கக் கூட்டம் நடைபெறும் இடத்தை அடைந்தவுடன், அவர்கள் இருவரும் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டனர். டிரைவர் ஒரு விஞ்ஞானி போல, உடை உடுத்திக் கொண்டார். ஐன்ஸ்டீன் தன்னைத் தானே ஒரு டிரைவர் போல் மாற்றிக் கொண்டு ஹால் உள்ளே சென்றனர்.

 இறுதியாக, அவரது டிரைவர் மேடைக்குச் சென்று, “சார்பியல் கோட்பாடு “ பற்றி விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். யாருமே அவரை சந்தேகம் கொள்ள இயலாத அளவில், விளக்கக் கூட்டம் நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது.    

 விளக்கம் முடிந்த பிறகு, கேள்வி பதில் சுற்று, வந்தது. கேள்விகளில் நிறைய கேள்விகள் ஏற்கனவே நடந்த கூட்டங்களில் கேட்கப்பட்டவை. எனவே எல்லா கேள்விகளுக்கும் உரிய பதில்களை டிரைவர் மிகவும் இலகுவாகக் கூறி விட்டார்.    

 கேள்வி பதில் சுற்று அனேகமாக முடியும் தருணத்தில், பார்வையாளர்களில் ஒருவர் கடைசிக் கேள்வியைக் கேட்டார். இந்த கேள்வி இதுவரை நடந்த விளக்கக் கூட்டங்களில் கேட்கப்படாத கேள்வியாக இருந்ததால், டிரைவருக்கு பதில் கூற இயலவில்லை. 

 இந்த கேள்விக்கு தவறாக பதில் கொடுத்தால், அவரது எஜமானர் கற்றறிந்த அறிஞர்கள் முன்னிலையில் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பது டிரைவருக்குத் தெரியும். நான் ஐன்ஸ்டீன் அல்ல; நான் ஒரு சாதாரண டிரைவர் என்று கூறினால், மிகப் பெரிய மகான்கள் இதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

 ஆகவே, டிரைவர் ஒரு கணம் தனக்குள் ஸ்திரப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு,“ உங்களுடைய கேள்வி, மிகச் சாதாரணமானது. இதற்கு என் டிரைவர் கூட விடை தருவார்” என்று பதில் கூறினார். அவர் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

 தன் டிரைவரின் இந்த பதிலைக் கேட்டு ஐன்ஸ்டீன் ஆச்சரியம் அடைந்தார். ஆனால், உள்ளுக்குள் முழுவதுமாக மகிழ்ச்சி அடைந்தார். அந்த கேள்விக்கு விடை கூறினார். எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல், விளக்கக் கூட்டம் முடிவுக்கு வந்தது.  

 இந்த உண்மையான சம்பவம் நமக்கு போதிப்பது என்னவெனில், “ஆழ்ந்த அமைதியும் மேலும் விழிப்புணர்வும் மனதில் இருக்கும் போது, இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து, நாம் வெளியே வந்து விடலாம் “ .  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...