முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைதியின் ஆற்றல் - புத்தரும், தத்துவ ஞானியும்

ஒரு முறை ஒரு சிறந்த தத்துவ ஞானி புத்தரைப் பார்ப்பதற்காக வந்தார். புத்தரிடம் கேட்பதற்காக அவர் நிறைய கேள்விகளை தன் வசம் வைத்திருந்தார். அவர், புத்தரிடம் வந்து கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.    

 புத்தர் அவரைக் கவனமாகப் பார்த்துவிட்டு,“ உண்மையாகவே உங்களுக்குப் பதில் தேவையா?” என்று கேட்டார். அப்படி என்றால் அதற்குரிய விலையை உங்களால் கொடுக்க முடியுமா ? 

  அந்த தத்துவஞானி,“ என் வாழ் நாள் முழுவதுமாக நான் விடைகளைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். நிறைய விடைகளைப் பெற்றேன்; ஆனால் ஒவ்வொரு விடைக்கும் பின்னால், புதிய கேள்விகள் எழுந்தன. நீங்கள் என்ன விலை கேட்கின்றீர்கள்? நான் முழு விலையையும் தருவதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். இந்த கேள்விகளுக்கான விடைகளுக்காக நான் ஏக்கத்தோடு இருக்கிறேன். இந்த கேள்விகளுக்கான பதில்களோடுதான் நான் இந்த உலகை விட்டு செல்ல வேண்டும் என ஆவல் கொண்டுள்ளேன்” என்று பதில் கூறினார்.    

 புத்தர் கூறினார், “ மிக நல்லது. நிறைய மக்கள் விடைகளைத் தெரிய ஆசைப் படுகிறார்கள். ஆனால், அதற்குரிய விலையைக் கொடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால்தான், நான் உங்களிடம் இப்படிக் கேட்டேன்” .

 ஒரு வருடம் நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். இதுதான் விலை. என் அருகே அமைதியாக ஒரு வருடம் அமர வேண்டும். ஒரு வருடம் சென்ற பிறகு, நானே உங்களிடம் கேள்விகளை சொல்லும் படி கேட்பேன். பிறகு உங்களுக்கு ஏதாவது கேள்வி என்னிடம் கேட்க விரும்பினால், நான் எல்லாவற்றிற்கும் விடை அளிப்பேன் என்று புத்தர் உறுதி மொழி கொடுத்தார். உங்களுடைய அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து விடுகிறேன் என்றார்.

 ஆனால், ஒரு வருடம் முழுவதுமாக, அமைதியாக இருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு உங்களுடைய கேள்விகளை என்னிடம் கொண்டு வரக்கூடாது.

 அந்த தத்துவ ஞானி யோசித்துக் கொண்டிருந்தார். சரி என்று சொல்லவா? அல்லது வேண்டாமா! ஒரு வருடம் என்பது மிகவும் நீண்ட காலம். இவர் உண்மையில் ஒரு வருடத்திற்குப் பிறகு கேள்விகளுக்கு பதில் தருவாரா? என தனக்குள் நினைத்துக் கொண்டார்.

அவர் புத்தரிடம்,“ ஒரு வருடத்திற்குப் பிறகு என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் விடை தருவீர்கள் என்பதற்கு முழு உறுதி மொழி கொடுக்க முடியுமா ?“ என்று கேட்டார். 

“ நான் உங்களுக்கு முழுவதுமாக உறுதி மொழி தருகிறேன் “ என்று புத்தர் பதில் கூறினார். நீங்கள் கேட்பீர்கள் என்றால் நான் பதில் தருவேன், ஆனால் நீங்கள் கேட்கவில்லை என்றால், நான் யாருக்கு விடை கூற முடியும். 

அந்த நேரத்தில், அருகில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்த சீடர் ஒருவர் சிரிக்கத் தொடங்கினார்.

அந்த தத்துவஞானி புத்தரிடம், “ஏன் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் ?” என்று கேட்டார். புத்தர்,“நீங்கள் அங்கு சென்று அவரிடம் கேளுங்கள்.” என்று பதில் கூறினார்.

தத்துவஞானி அந்த சீடரிடம் சென்று, ஏன் சிரிக்கிறீர்கள், என்று கேட்டார்.

அந்த சீடர்,“ உங்களுக்கு ஏதாவது கேட்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால், இப்போதே கேட்டு விடுங்கள். அவர் இதையேதான் எனக்கும் செய்தார். ஆனால், உண்மையைத்தான் சொல்கிறார் என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். ஒரு வருடத்திற்குப் பிறகு நீங்கள் என்ன கேட்டாலும், அவர் பதில் சொல்வார். ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகு யார் கேட்கப் போகிறார்கள் ?” என்று பதில் கூறினார்.

நான் ஒரு வருடமாக இங்கு மவுனமாக உட்கார்ந்து இருக்கிறேன். இப்போது புத்தர் என்னிடம் “கேள்வி கேளுங்கள், சகோதரரே” என்று என்னை உத்வேகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒரு வருட காலமாக அமைதியாக உட்கார்ந்த பிறகு, எதுவுமே கேட்பதற்கு இப்போது இல்லை; எல்லா விடைகளும் பெறப்பட்டு விட்டன. உங்களுக்கு கேட்கவேண்டும் என்ற ஆசை இருந்தால், இப்போதே கேளுங்கள்; அப்படி இல்லை எனில், ஒரு வருடத்திற்குப் பிறகு, எதுவுமே கேட்பதற்கு இருக்காது.

பதில்கள் தெரிய வேண்டும் என விரும்பியதால், அந்த தத்துவஞானி புத்தருடன் அங்கே தங்கினார். தினமும் அமைதியாக அமர்ந்து கொள்வார். காலத்தைப் பற்றி அவர் மறந்து விட்டார்; ஏனென்றால் அவரது எண்ணங்களின் வேகம் குறைந்து விட்டன; காலம் பற்றிய விழிப்புணர்வை அவர் இழந்து விட்டார். 

ஆனால், புத்தர் காலம் பற்றி முழு விழிப்புணர்வோடு இருந்தார். ஒரு வருடம் முடிந்தது. புத்தர், அந்த தத்துவ ஞானியிடம் சென்று, “இப்போது உங்களுக்கு என்ன தேவையோ, அதைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உறுதி மொழி கொடுத்த படி ஒவ்வொரு கேள்விக்கும் விடை தருகிறேன். உங்களிடம் கேட்பதற்கு ஏதாவது இருக்கிறதா ?’ என்று கேட்டார்.
அந்த தத்துவஞானி சிரித்துக் கொண்டே கூறினார்,“அந்த சீடர் கூறியது மிகவும் சரி. ஒரு வருடமாக நான் இங்கு அமர்ந்து கொண்டிருந்த பிறகு, எனக்கு கேட்பதற்கென்று இப்போது எதுவுமே இல்லை. உங்களுடைய அருளாசியின் மூலமாக, அனைத்து பதில்களும் என்னிடம் வந்து விட்டன “.
பதில்கள் கொடுக்கப் படவில்லை, ஆனால் பெறப்பட்டன.
பதில்கள் வெளியே இருந்து வரவில்லை, ஆனால் அவை உள் இருந்து வந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...