முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையின் பொருள்

ஒரு காலத்தில், ஒரு மனிதனுக்கு தீவிர விருப்பம் ஒன்று இருந்தது. அது என்னவெனில், வாழ்க்கையின் மிக உண்மையான பொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே. அதைத் தேடி கண்டு பிடிப்பதற்காக அவன் வெளியே கிளம்பினான். ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடம் என அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள், அவன் ஒரு மனிதனை சந்தித்தான். அந்த மனிதன் இவனுக்கு அறிவுரை வழங்கினான்; இந்த கிராமத்தில் முடிவில் ஒரு குகை இருக்கிறது; அங்கு சென்றால், உன் கேள்விக்கு விடை கிடைக்கும்.    

 அவன் சொல்லியபடியே, இந்த மனிதன் அந்த குகைக்குச் சென்றான்; அங்கு ஒரு சந்நியாசியை சந்தித்தான்; அந்த சந்நியாசி இவனிடம் ஒரு கிராமத்தைப் பற்றிக் கூறினான்; அந்த கிராமத்தில் ஒரு நாற்சந்தி இருக்கும்; அங்கு போனால், உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ காணலாம், என்றார்.

 மிகுந்த உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும், அந்த மனிதன் அந்த கிராமத்தைத் தேடி வெளியே கிளம்பினான். பல வாரங்கள் தேடிய பிறகு அந்த கிராமத்தைக் கண்டு பிடித்தான்; முடிவாக அந்த நாற்சந்தியை அடைந்தான். 

 அங்கு மூன்று கடைகளை அவன் பார்த்தான். கடைகளுக்கு மிக அருகில் சென்றான். ஒரு கடையில் மரத்துண்டுகள் விற்கப்படுவதைப் பார்த்தான்; இரண்டாவது கடையில் உலோகத்துண்டுகள் மற்றும் மூன்றாவது கடையில் மெல்லிய உலோகக் கம்பிகள் விற்கப்படுவதைக் கண்டான்.

 அந்த மனிதன் வெகு நேரமாக அந்தக் கடைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் எந்த உண்மையைத் தேடி வெளியே வந்தானோ, அதற்கும் இந்த கடைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைக் கண்டான். மிக அதிக அளவில் யோசித்துப் பார்த்தும், அதில் இருந்து அவனால் எதையும் உணரமுடியவில்லை.

 ஏமாற்றம் அடைந்த நிலையில், அவன் அந்த சந்நியாசியிடம் திரும்பிச் சென்று, அவரிடம் அந்த கடைகளைப் பற்றிக் கூறினான். அந்த சந்நியாசி அவனைப் பார்த்து, “காலம் வரும் போது, நீ அனைத்தையும் புரிந்து கொள்வாய்“ என்று பதில் கூறினார்.

 அந்த மனிதன் விளக்கமாகக் கூறும்படி வேண்டினான்; ஆனால், சந்நியாசி எந்த பதிலும் கூறவில்லை. அந்த மனிதன் விரக்தியோடு திரும்பினான். இங்கு வந்ததே பெரிய முட்டாள்தனம் என்று நினைத்தான். ஆனால், அங்கிருந்து வெளியேறிய பிறகும் கூட, அவன் அந்த உண்மையைத் தேடுவதை தொடர்ந்தான்.   

 காலம் கடந்து செல்லச் செல்ல, உண்மையைத் தேடும் இந்த அனுபவம் குறித்த விஷயங்கள் மங்கத் தொடங்கின . ஒரு நாள் இரவு, அவன் வெளியே நடந்து கொண்டிருக்கும் போது, அவன் இனிமையான இசை ஒன்றை கேட்டான்; அது அவனது கவனத்தை ஈர்த்தது; அந்த வசீகரமான இசை, அவனிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது; அதை நோக்கி கவரப்பட்டான்.    

 அவன் அந்த இசையைத் தொடர்ந்து சென்றான். அந்த இசை எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடித்த போது, ஒரு இசைக் கலைஞனின் விரல்கள் சித்தார்க் கம்பிகளில் அசைந்து நடனமாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்தான். திடீரென்று, எதையோ கண்டுபிடித்ததைப் போல மகிழ்ச்சியில் திளைத்தான்; மேலும் அவன் கண்கள் கண்ணீரால் நிறைந்தன!     

 மெல்லிய உலோகக் கம்பிகள், உலோகத்துண்டுகள், மரம் இவற்றால் ஆன அந்த சித்தாரைப் பார்த்ததும், அவனுக்கு அந்த கிராமத்து நாற்சந்தியில் இருந்த அந்த மூன்று கடைகள் ஞாபகத்திற்கு வந்தன. அப்போது அதன் முக்கியத்துவத்தை அவனால் உணர முடியவில்லை; ஆனால், இப்போது அதைப் பற்றிய மெய்யுணர்தல் அவனுள் எழுந்தது. அவனது இதயம் உருகத் தொடங்கியது; அவன் முழுவதுமாக அன்பால் நிரப்பப்பட்டான்; அவனால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அந்த நாளில் வாழ்வின் உண்மையான பொருளை அவன் புரிந்து கொண்டான். அந்த சந்நியாசியின் செய்தியின் பொருளையும் புரிந்து கொண்டான்.

 நம்மிடம் அனைத்துமே நம்முள் ஏற்கனவே இருக்கின்றன. சரியான வழியில் அவற்றை தகவமைத்துக் கொண்டும், ஒருங்கிணைத்துக் கொண்டும் செல்வதுதான் நமக்குத் தேவைப் படுகிறது.  

 நாம் வாழ்க்கையின் பொருளை தேடிக் கொண்டே இருக்கிறோம்; ஆனால், உடைந்து சிதறிய பகுதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; எனவேதான், வாழ்க்கையின் உண்மையான பொருளை நம்மால் உணர முடியவில்லை. எப்போது நமது மனம், உடல், மற்றும் இதயம் ஒன்று சேரும் இந்த கணத்தில், அந்தக் கணமே உண்மையில் ஒரு இனிமையான இசையாக மாறுகிறது; அதன் பிறகு வாழ்க்கையின் உண்மையான பொருளை நாம் உணரத் தொடங்குகிறோம்!

 *

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...