முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திறப்பதற்கான கருவி

ஒரு நகரின் மத்தியில் இருக்கும் ஒரு குறுகலான தெருவில்,  
பூட்டு-சாவி விற்கும் ஒரு பழைய கடை இருந்தது. மக்கள் தங்களுக்குத் தேவையான பூட்டு சாவிகளை அங்கு வந்து வாங்குவார்கள். சில வேளைகளில், தங்களின் உண்மையான சாவியைத் தொலைத்து விட்டால், அதற்கான மாற்று சாவியைப் பெற்று செல்வார்கள்.

  இந்தக் கடையில் ஒரு கனமான சுத்தியலும் இருந்தது. எப்போதாவது பூட்டை உடைக்க அது பயன்படும்.

  அந்த சுத்தியல், ஒரு விஷயத்திற்காக அடிக்கடி வியப்பிற்கு உள்ளானது. அது என்னவென்றால், இந்த சிறிய சாவிகள் இந்த கனமான பூட்டுக்களை மிக லகுவாக திறந்து விடுகிறது. அதே நேரத்தில் நான், அந்த பூட்டைத் திறப்பதற்காக எத்தனையோ தடவைகள் அதை அடிக்க வேண்டி இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டது.

  இதைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் அதனால் இருக்கவே முடியவில்லை. கடை மூடியவுடன், அந்த சுத்தியல் ஒரு சிறிய சாவியைப் பார்த்து, “ சகோதரியே, கடினமான பூட்டுகளைக் கூட நீ மிக லகுவாக திறந்து விடுகிறாயே ! இதற்கு உன்னிடம் இருக்கும் சக்திதான் என்ன? ஆனால் அதே நேரம் நான் மிக சக்திவாய்ந்தவனாக இருந்தும் என்னால் அதை திறக்க முடியவில்லையே !” என்று கேட்டது.

  அந்த சாவி புன்சிரிப்போடு, உண்மையாக நீ உன்னுடைய விசையைச் செலுத்தி பூட்டைத் திறப்பதற்காக அதை அடித்து உடைத்து விடுகிறாய். நான் ஒரு போதும், பூட்டை சிறிதளவு கூட துன்புறுத்தியது இல்லை. நான் அவனது இதயத்தைத் தொட்டு அங்கு எனக்கு ஒரு இடத்தைத் தயார் செய்து கொள்கிறேன். அதன் பிறகு நான் அவனிடம் திறந்து விடு என பணிவாகக் கேட்கிறேன். உடனே அவனும் திறந்து விடுகிறான்.

  நண்பர்களே, மனித வாழ்க்கையிலும், இதே மாதிரியான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் யாராவது ஒருவரை வெற்றி கொள்ள வேண்டும் என்று விரும்பினால், நாம் அவரை நமக்கு சொந்தமாக்கி, அதன் பிறகு அவரது இதயத்தினுள் இடம் பிடிக்க வேண்டும்.

  அதிகாரத்தால் சில பேரை நாம் ஏதாவது சில வேலைகளை செய்ய வைக்க முடியும். ஆனால் அந்த வழியில் நாம் பூட்டைத் திறக்க முடியாமல், அதற்குப் பதிலாக அதை உடைத்து விடுகிறோம்.   

  அதாவது, நாம் அந்த மனிதருடைய பயன்பாட்டையும், அவரது உள்ளார்ந்த திறமையையும் அழித்து விடுகிறோம். அதே நேரத்தில், நாம் அன்பினால் ஒருவரது இதயத்தை வெற்றி கொள்வோமானால், நாம் எப்போதும் அவரை நம் நண்பராக்கிக் கொள்வோம்; அவரது பயன்பாட்டையும், திறமையையும் பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.
  அதிகாரத்தால் அடையக் கூடிய எதை வேண்டுமானாலும் நீ அன்பால் சாதிக்க முடியும், ஆனால் அன்பால் சாதிக்க முடிந்த எந்த ஒன்றையும் நீ அதிகாரத்தால் சாதிக்க முடியாது.
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
மனதின் மீது வைத்த அன்பு பக்தியானது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது .
என்ற கவிஞரின் பாடல் வரிகள் இதற்கு நிரூபணம் ஆகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...