ஒரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அவருடைய மாணவர்களுக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்தார். மும்பையில் இருக்கும் தாராவி என்ற இடத்தில் இருக்கும், ஒரு சேரியில் இது நடக்கிறது. 10 முதல் 13 வயது வரையுள்ள பையன்களிடம் தொடர்பு கொண்டு, அவர்தம் வருங்காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறார்கள் என்பதையும், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் சமூக சூழ்நிலைகளையும் அவர்கள், மதிப்பாய்வு செய்திட வேண்டும்.
அந்த கல்லூரி மாணவர்கள் வேலை செய்யத் தொடங்கினார்கள். அந்த சேரியில் உள்ள 200 குழந்தைகளின் வீடுகளின் சூழல், அவர்களுடைய பெற்றோர்களின் சூழல், வாழ்க்கை முறை மற்றும் அங்குள்ள மக்களின் கல்வித்தரம், மது, போதை வஸ்து இவற்றின் நுகர்வு இது போன்ற பல்வேறு காரணிகளை கருத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இதற்குப் பிறகு அங்கே இருக்கும் பையன்களை சேர்த்து, பேட்டி எடுத்தனர். அவர்களுடைய கருத்துக்கள் தீவிரமாக கேட்கப்பட்டு, குறிப்புக்கள் கருத்தில் கொள்ளப் பட்டன.
இந்த அசைன்மெண்ட் முடிவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆனது. இதன் முடிவின் படி, அந்தப் பையன்களில் 95% குழந்தைகள் கிரிமினல் வழிகளில் போகின்றனர்; மேலும் வளர்ந்த பிறகு, அந்தக் குழந்தைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக, சிறைக்கு செல்கிறார்கள். வெறுமனே, ஒரு 5% குழந்தைகள் மட்டுமே, ஒரு நல்ல வாழ்க்கையை நடத்திச் செல்ல முடிகிறது.
அதாவது இந்த அசைன்மெண்ட் முடிவுற்ற போது, தொடர்ந்து, இது மறக்கப்பட்டது. 25 வருடங்களுக்குப் பிறகு, மற்றொரு பேராசிரியர் பார்வையில் இது பட்டது. அவர் 5 குழுக்களை தயார் செய்தார். ஒவ்வொரு குழுவிலும் 3 மாணவர்கள் இருந்தார்கள். அவர்களை தாராவிக்கு அனுப்பினார்; கணிப்புக்கள் எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கிறது என்று காண வேண்டும் என்று கருதப்பட்டது. அந்த 200 பேர்களில், கொஞ்சம் பேர் இறந்து போய் விட்டனர்; மேலும் கொஞ்சம் பேர் அடுத்த இடத்திற்கு சென்று விட்டார்கள். இருந்தாலும், 180 பேரை, அவர்களால் சந்திக்க முடிந்தது. இப்போது, அந்த கல்லூரி மாணவர்கள் இந்த செயலை எடுத்துச் செய்யும் போது, அவர்களுக்கு ஆச்சரியம். அந்த முடிவுகள் முந்தைய கணிப்பை விடவும் மாறுபட்டு காணப்பட்டது.
அவர்களில் 4 அல்லது 5 பேர் மட்டுமே, சாதாரணமான சண்டைகளுக்காக, குறுகிய காலத்திற்கு ஜெயிலில் இருந்தார்கள்! மேலும், எல்லோருமே, சாதாரணமாகவே, கண்ணியத்தோடு வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருந்தார்கள். இன்னும், சிலர் பொருளாதார ரீதியிலும் மிக நன்றாக வாழ்க்கையைக் கொண்டு சென்றார்கள்.
அந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பேராசிரியரும் கூட, இதைப் பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்தார்கள். ஒரு சூழல், அதாவது அது மக்களை இலகுவாக கவர்ந்து இழுத்து இருக்கிறது; குற்றங்கள் செய்வதில் இருந்து விடுவிக்க, அங்குள்ள மக்கள் கடினமாக உழைத்து நேர்மையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், ….. இது சாத்தியம் ஆனது எவ்வாறு?
கணக்கெடுப்பின் முடிவுகளை வைத்து ஆலோசித்த பிறகு, அந்த மாணவர்கள் திரும்பவும் அந்த 180 பேரை சந்தித்தார்கள். அவர்களிடம் இருந்து இது எவ்வாறு நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தார்கள். அந்த மக்கள் ஒவ்வொருவருமே கூறினார்கள்,
“நாங்களும் கூட தவறான வழியில்தான் போய்க் கொண்டு இருந்திருப்போம்; ஆனால், எங்களுடைய ஆசிரியை ஒருவரால், நாங்கள் சரியான வழியில் வாழத் தொடங்கினோம். குழந்தைப் பருவத்தில் அவர்கள் எது சரி மற்றும் எது தவறு என்னும் அறிவை எங்களுக்குத் தராமல் இருந்திருந்தால், இன்று நாங்களும் கூட குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும்.. !”
அந்தக் கல்லூரி மாணவர்கள், அந்த ஆசிரியை சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அவர்கள் அந்தப் பள்ளிக்குச் சென்ற போது அந்த ஆசிரியை ஏற்கனவே, பணி ஓய்வு பெற்றதை அறிந்தார்கள். எனவே அவர்கள் தேடிப் பிடித்து அவர் வசிக்கும் வீட்டைச் சென்று அடைந்தார்கள். அவர்கள் எல்லாவற்றையும் கூறிவிட்டு பிறகு கேட்டார்கள்,“ அந்தப் பையன்கள் மீது நீங்கள் என்ன மந்திரம் செய்தீர்கள்; அவர்கள் வாழ்க்கையில் இந்த மாதிரியான, ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி அவர்களை நேர்மையான குடிமக்களாக மாறச் செய்தீர்கள்?“
அந்த ஆசிரியை சாதாரணமாக பதிலளித்தார், இயல்பான எளிமையோடு: “மேஜிக் இல்லவே இல்லை அன்பானவர்களே; எனக்கு எந்த மேஜிக்கும் தெரியாது.” மேலும் ஒரு பதட்டமான சிரிப்பை உதிர்த்தார். “நான் என்னுடைய மாணவர்களை, எனது சொந்தக் குழந்தைகளைப் போல நேசித்தேன்!” நான் செய்தது என்றால், அது ஒன்றே ஒன்றுதான்.” அன்பான புன்னகை அவரிடம்; பெருமிதமான பிரகாசம் அவரது கண்களில் தெரிந்தது.
நமக்கு ஒரு போதும் தெரியாது; எவ்வாறு மற்றவர்களுடைய வாழ்க்கையை நம்முடைய இரக்க உணர்வினால், தொட இயலும் என்பது. நம்மிடம் இருக்கும், சிறிய சைகை கூட, ஒரு மந்திரம் போன்ற தொடுதலாகி, யாரோ ஒருவரது வாழ்க்கையைத் தன்மை மாற்றம் அடையச் செய்கிறது. மேலும், நமது ஆசிரியர்களின் கைகளில் இருக்கின்ற, மாபெரும் ஆற்றலாக அது இருக்கிறது!
இந்த இதய நிறைவுக் கதைக் குழு, உலகம் முழுவதும் இருக்கின்ற எல்லா ஆசிரியர்களையும், அவர் தம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக போற்றி,
வணங்கி நிற்கிறது.
ஒரு நல்ல ஆசிரியர் அல்லது வழிகாட்டி கிடைப்பது என்றால், அது ஒரு வரப்பிரசாதம். ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு பாடத்தில் நிபுணத்துவம் அடைய வேண்டும் என்பதற்காக, அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக