முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹனுமான் வால்மீகி ராமாயணம்

வால்மீகி அவருடைய இராமாயணத்தை நிறைவு செய்த போது, நாரதருக்கு அது ஈர்ப்பாக இருக்கவில்லை. “இது நன்றாக இருக்கிறது; ஆனால், ஹனுமான் எழுதி இருப்பது, இன்னும் மேலாக இருக்கிறது.” என்றார் நாரதர்.

 “ஹனுமான் ராமாயணம் கூட எழுதி இருக்கிறாரா? வால்மீகிக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. யாருடைய இராமாயணம் மிகவும் நன்றாக இருக்கிறது, என்பது பற்றி மேலும் ஆச்சரியம் அடைந்தார். ஆகவே, ஹனுமானைத் தேடிக் காண, கிளம்பி விட்டார். 

 கதலி வனத்தில் வாழைத் தோப்பு; அவர் ஏழு அகலமான வாழை இலைகளில், இராமாயணம் பொறிக்கப்பட்டு இருப்பதை, பார்த்தார்.
அவர் அதை வாசித்தார்; அது நேர்த்தியாக இருந்தது. மிகவும் துல்லியமான இலக்கணத் தெரிவு, அத்துடன் சேர்த்து சொல்வளம், துல்லியமான மற்றும், காதுக்கினிய கருத்துக்கள் என்று காணப்பட்டது. அவரால், அவருக்கே கூட உதவிட முடிய வில்லை; அழுவதற்கு ஆரம்பித்தார்.

 “ இது என்ன அவ்வளவு தூரம் மோசமாகவா இருக்கிறது” என்று கேட்டார் ஹனுமான்.
“இல்லை; இது மிகவும் நன்றாக இருக்கிறது.” என்றார் வால்மீகி.

 “பிறகு நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? “இது ஹனுமான் கேள்வி.
“ஏனென்றால், உனது இராமாயணத்தைப் படித்த பிறகு, என்னுடையதை, யார் ஒருவருமே படிக்க மாட்டார்களே,” என்று பதில் சொன்னார் வால்மீகி.

 இதைக் கேட்டுக் கொண்டு இருந்த ஹனுமான், அப்படியே சாதாரணமாக, அந்த ஏழு வாழை இலைகளையும், அப்படியே கிழித்து எறிந்து விட்டார்.“ இப்பொழுது யார் ஒருவரும், ஒரு போதும், ஹனுமான் இராமயணத்தைப் படிக்க மாட்டார்கள்” என்றார்.

 ஹனுமான் மேலும் கூறினார், “எனக்கு என்னுடைய இராமாயணம் தேவைப்படுவதை விடவும், மிக அதிகமாக, உங்களுக்கு, உங்கள் இராமயணம் தேவைப் படுகிறது.” நீங்கள் உங்களைப் பற்றி எழுதினீர்கள். ஆகவே இந்த உலகம், வால்மீகியை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இருக்கும். நான் என்னுடைய இராமாயணத்தை எழுதினேன்; ஆகவே நான் ராமரை நினைவில் கொள்கிறேன்.

 அந்தக் கணத்தில் வால்மீகி ஒன்றை, உணர்ந்தார்; தனது வேலையின் மூலமாக, தனக்கு எப்படிப்பட்ட மதிப்பு வந்தாக வேண்டும் என்று ஆசை கொண்டு, தான் விழுங்கப்பட்டு விட்டோம் என்று உணர்ந்தார்.
அது எங்கே செல்லாத ஒன்றாகி விடுமோ என்கிற ஒரு பயத்தினால், அந்த வேலையை, வைத்து தன்னை விடுதலை செய்யாமல் போனது குறித்து உணர்ந்தார்.
இராமயணக் கதையின் சாராம்சத்தைப் போற்றவில்லை என்கிற நிலையில் அவரது மனதின் முடிச்சு அவிழ்க்கப்படாமல் அப்படியே இருந்தது.

 அவரது ராமாயணம், பேராசையின் ஒரு வெளிப்பாடு; ஆனால் ஹனுமானது ராமாயணம் தூய்மை, அர்ப்பணிப்பு மற்றும் அன்பினால் விளைந்த ஒரு விஷயம். எனவேதான், ஹனுமானின் இராமாயணம், மிகவும் மேம்பட்ட ஒன்றாக, போற்றப்பட்டது.  

 வால்மீகி உணர்ந்தார்;

 *“ராமரை விடவும் மேலானது … என்றால் அது ராம் என்கிற நாமமே!* *“(राम से बड़ा राम का नाम).*

 இங்கே இன்னும் கூட, ஹனுமான் போன்ற மக்கள் இருக்கின்றார்கள்; அவர்கள் தாங்கள் புகழ் பெற வேண்டும் என்று விரும்பாதவர்கள். அவர்கள், தமது கடமையை ஆற்றுகிறார்கள்; அவற்றின் குறிக்கோள், நிறைவேற்றப் படுகின்றன.
உண்மையில், புகழ்ந்து போற்றப் படாத “ஹனுமான்கள்” நம்மிடையே இருக்கின்றார்கள். … அம்மா, அப்பா, சகோதரர், சகோதரி, தாத்தா, பாட்டி, மனைவி, நணபர்கள்… நாம் அவர்களை, நினைவில் கொள்ள வேண்டும்; இன்னும், நாம் அவர்கள் எல்லோருக்குமே, நன்றி உடையவர்களாகவும் இருந்திட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...