முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யார் முட்டாள்?

நாம் அனைவருமே முல்லா நஸ்ருதீனைப் பற்றி நன்கு அறிவோம். சுமார் 800 வருடங்களுக்கு முன்னர், இந்த அறிவாளி மனிதர் முல்லா துருக்கி, ஈரான் பாக்தாக் நகரங்களில் உள்ள பாலை வனத்தில் வழக்கமாக அலைந்து திரிந்து கொண்டு இருப்பார். இவர் விவேகத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் முறையானது, முற்றிலும் வழக்கத்திற்கு மாறானாது. இவர் போதனை செய்வதோ அல்லது சொற்பொழிவு ஆற்றுவதோ கிடையாது. பண்டைக் கால நகைச்சுவை முறையையும், எளிமையான எடுத்துக் காட்டுகளையும் உபயோகித்து விவரித்துக் கூறுவார்.

  ஏதாவது ஒன்றைப் பற்றி வேடிக்கையான முறையில் விவரித்தால், அது மனதில் ஆழமாக வேரூன்றி விடும் என்பது முல்லாவின் நம்பிக்கை.

  ஒரு நாள் முல்லா கடைத்தெரு வழியாக சென்று கொண்டு இருந்தார். அவர் வழக்கமாக கழுதையின் மீது அமர்ந்து சவாரி செய்வார். அதன் பின் புறத்தை நோக்கி அமர்ந்து, சவாரி செய்வார். அவரது இந்த நடைமுறையானது மக்களை திகைப்படையச் செய்யவில்லை; மாறாக இது மக்களை சிரிக்கும்படி செய்தது.

  நல்லது. முல்லா அந்தக் கடைவீதியில் இருக்கும் கடைக்குச் சென்று, கொஞ்சம் பேரீச்சம் பழங்களை வாங்கினார். கடைக்காரருக்கு பணம் கொடுக்க வேண்டிய சமயத்தில், முல்லா, தன்னுடைய காலணிகளை கையில் எடுத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்தார். காலணிகளின் மூலை முடுக்கெல்லாம் தேடினார்; ஆனால் பணம் அங்கு இல்லை. தன்னுடைய பைஜாமா பாக்கெட்டின் உள் தேடினார்; அங்கும் பணம் இல்லை. அந்த நேரத்தில், அங்கு ஒரு பெரிய கூட்டமே கூடி விட்டது. ஏற்கனவே, முல்லா கழுதையின் மீது வித்தியாசமான முறையில் அமர்ந்து சவாரி செய்வது ஒன்றே போதும், கூட்டம் கூடுவதற்கு. இப்போது அவர் செய்யும் இந்த வேடிக்கையான செயலானது, மக்களின் கவனத்தை அவரை நோக்கி ஈர்த்தது.    

  இப்போது முல்லா, ஒரு புறத்தில் பணத்தை வித்தியாசமான இடங்களில் தேடிக் கொண்டும்; மற்றொரு புறத்தில் தான் வாங்கிய பேரீச்சம் பழங்களை சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்.

 இதைப் பார்த்த கடைக் காரருக்கு உண்மையாக சிறிது வருத்தம் ஏற்பட்டது. இந்த மனிதர் பணம் கிடைக்க வாய்ப்பில்லாத இடங்களில் அதைத் தேடிக் கொண்டும்; அதற்கு மேலாகப் பணம் கொடுக்காமல், அந்த பேரீச்சம் பழங்களை சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாரே! என்று கடைக் காரர் நினைத்தார். இவரால் பணத்தைக் கண்டு பிடிக்காமல் போய்விட்டால், நான் இவருடைய வயிற்றில் இருந்து பழங்களை எடுக்க முடியுமா? 

  இவ்வாறாக கடைக்காரர் எண்ணிக்கொண்டு இருக்கும் போது, முல்லா தன்னுடைய தொப்பியை தலையில் இருந்து எடுத்து, அதனுள் பணத்தைத் தேடிக் கொண்டு இருந்தார். முல்லாவின் இந்த செயலைப் பொறுக்க முடியாமல்,“ஏன் நீங்கள் இங்கும் அங்குமாக பணத்தைத் தேடுகிறீர்கள்? நீங்கள் முதலில் உங்கள் குர்தாவில் இருக்கும் பையில் பார்த்திருக்கலாமே? என்றார்.   

  இதற்கு, முல்லா நீ சொல்வது சரிதான். இந்த ஆலோசனையை நீ முன்பே கூறியிருக்கலாமே?என்றார்.

 இதைக் கூறிக் கொண்டு இருக்கும் போதே, முல்லா தன்னுடைய கையை குர்தாவின் பையிற்குள் நுழைத்து, அங்கிருந்து பணத்தை எடுத்து கடைக் காரரிடம் கொடுத்தார். அவரிடம், “இந்தப் பணம் இவ்வளவு நேரமாக இங்குதான் இருந்தது; இந்தப் பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பை நான் இப்போதுதான் கொடுத்தேன்” என்றார்.   
 
  இதைக் கேட்டவுடன் அந்தக் கூட்டத்தினர் அனைவரும் சிரித்தனர். அந்த கூட்டத்தில் உள்ள வயதான மனிதர் ஒருவர், “இவனுக்கு பைத்தியம் பிடித்து இருப்பது போல தெரிகிறது; பணம் குர்தாவில் இருப்பது தெரிந்தும், அதை இங்கும் அங்குமாக தேடிக் கொண்டு இருக்கிறார்.

  இப்போது இது முல்லாவுக்கான சந்தர்ப்பம்.

  அவர் என்ன செய்தார்? ஏன் இப்படி ஒரு நாடகத்தை நடத்தினார்? என்பதற்கு பதில் கூறும் நேரம் வந்தது. அந்தக் கூட்டத்தில் அனைவரையும் கடுமையாகப் பார்த்துப் பதில் கூறினார்.

  பணம் எங்கு வைத்திருக்கிறேன் என்பதை பார்க்க முடியாமல் போன அந்த சிறிய விஷயத்திற்காக நீங்கள் என்னை முட்டாள் என நினைக்கின்றீர்கள். ஆனால், தயவு செய்து நீங்கள் உங்களுக்குள் பாருங்கள்; உங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்தி எண்ணிப் பாருங்கள்; கடவுள் உங்கள் இதயத்தினுள் இருக்கிறார் என்பதை அறிந்த நிலையிலும், நீங்கள் அவரை வெளியே தேடிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.   

  நான் முட்டாள் என்றால், இப்போது உங்களைப் பற்றி என்ன சொல்ல! நான் ஒரு சிறிய செயலுக்காக, முட்டாளாக இருக்கிறேன். ஆனால், நீங்களோ வாழ்க்கையின் மிகச் சிறந்த உண்மையைப் பற்றி அறியாமல் முட்டாளாக இருக்கிறீர்கள்.    

  முல்லாவினுடைய இந்த மிகப் பெரிய கோரிக்கையானது, இன்றும் மனித சமுதாயம் முழுமைக்கும் ஒரு பாடமாகவும்; கவனிக்கத் தக்க ஒரு படிப்பினையாகவும் இருக்கிறது.   

  அந்த முழு முதற் பொருளும், தெய்வீகமும் நம் இதயத்தினுள் இருக்கிறது என்று தெரிந்தும், நாம் அதை வெளியே எங்கேயோ தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். 


“ பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்;
அவர் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறார்.“

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...