முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உண்மையான மன்னிப்பு

ஒரு முறை கௌதம புத்தர் தன் சீடர்களோடு, அமர்ந்திருக்கும் போது, ஒரு மனிதன் கோபத்துடன் புத்தரை நோக்கி உள்ளே வந்தான்.    
  
 புத்தர் ஏதோ தவறு செய்வதாக அந்த மனிதன் வழக்கமாக நினைத்துக் கொள்வான். புத்தர், மக்களை தியானம் செய்ய சொல்கிறார்; மக்களும் மிக அதிக அளவில் பெருங்கூட்டமாக அவரால் ஈர்க்கப்படுகின்றனர்.
  
 அவன் ஒரு வியாபாரி. அவனுடைய குழந்தைகள் அதிகமான நேரத்தை புத்தரோடு செலவழிப்பதை அவன் எதிர்த்தான். இந்த நேரத்தை வியாபாரத்தில் செலவிட்டால், அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் ; உறுதியாக ஒரு நல்ல வாழ்க்கை அமையும்.
  
 ஒருவர் அவருடைய அன்றாட நாளில், நான்கு மணி நேரமாக கண்களை மூடி உட்கார்ந்து இருப்பது என்பது முழுவதுமாக நேரத்தை வீணாக்குவது என்று எண்ணினான். இதனால் அவன் ஏமாற்றமும், களைப்பும் அடைந்தான். 

 இந்த மனிதருக்கு, அதாவது புத்தருக்கு ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தான்.  
கோபம் நிறைந்த மனதோடு, புத்தரை நோக்கி மன உறுதியோடு நடந்தான்.        

 அவன் புத்தரை நெருங்கியவுடனே, அவனது எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் மறைந்து விட்டன; அவனிடம் இருந்த கோபமும் இல்லாமல் போய் விட்டது.
  
 தன் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில் தோல்வி அடைந்த அவன், புத்தர் முகத்தின் மேல் எச்சில் உமிழ்ந்தான். புத்தர் தன் புன் சிரிப்பை அதற்குப் பதிலாகக் கொடுத்தார்.
  
 அங்கு உட்கார்ந்திருந்த புத்தரின் சீடர்கள், அந்த மனிதனுக்கு கோபத்துடன் பதிலடி கொடுக்க தயார் ஆனார்கள். ஆனால், புத்தரின் அந்த அமைதியான இருப்பானது, அவர்களை அப்படி செய்வதற்கு அனுமதிக்கவில்லை. இவ்வாறு புத்தரை ஒருவர் அவமானப் படக்கூடிய விதத்தில், நடத்தியதை அந்த சீடர்களால் நம்பவே முடியவில்லை !. ஆனால் அவர்களால் எதுவும் பேசவும் முடியவில்லை.
  
 அந்த மனிதரால், அந்த இடத்தில் அதற்கு மேல் நிற்க முடியவில்லை; தன்னுடைய இந்த செயலுக்கு சுற்றியுள்ள யாருமே எந்த எதிர் செயலும் செய்ய முன்வரவில்லை ! புத்தரும் தன் புன் சிரிப்பைத்தான் பதிலாகக் கொடுத்தார். இனியும் இங்கு நான் இருந்தால், நான் கோபத்தால் நிலை குலைந்து ஏதாவது செய்து விடுவேன் என உணர்ந்து வெளியே சென்றான்.
  
  அந்த மனிதர் வீட்டுக்குத் திரும்பியதில் இருந்தே, அவரால் புத்தரின் புன்சிரிப்பான அந்த முகத்தோற்றத்தை, அவரது மனதில் இருந்து அழிக்கவே முடியவில்லை. அவமரியாதையான செயலுக்கு வழக்கத்திற்கு மாறான எதிர்செயலை செய்த ஒருவரை, தன் வாழ்க்கையில் முதன் முறையாக இப்போதுதான் அந்த மனிதர் சந்தித்தார்.
  
 இரவு முழுவதும் அவரால் தூங்க முடியவில்லை ; அவரது இதயம் முழுவதுமாக தன்மை மாற்றம் அடைந்தது.

 தூக்கம் வராமல் நடுங்கிக் கொண்டும், அசைந்து கொண்டும் இருந்தார். இந்த உலகமே தகர்ந்து விழுவது போல உணர்ந்தார்.
  
 எனவே அடுத்த நாள் புத்தரிடம் சென்று அவர் பாதங்களில் விழுந்து,“தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்! நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை” என்றார். 
 
 இதற்கு புத்தர், “என்னால் உன்னை மன்னிக்க முடியாது” என்று பதில் கூறினார்.
புத்தரின் இந்த பதிலைக் கேட்டு அவரது சீடர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். புத்தர், தன் வாழ்நாள் முழுவதும் எல்லோரிடமும் மிகவும் இரக்கத்தோடு இருந்தார்.

 ஒருவன் தன் கடந்த காலத்தில், எப்படி இருந்த போதிலும், அவனை தன் ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அப்படிப்பட்ட சிறந்த மகான், ஏன் இந்த வியாபாரியிடம், அவனை மன்னிக்க முடியாது என்று கூறுகிறாரே என்று அதிர்ச்சி அடைந்தனர். 
புத்தர் தன்னை சுற்றிலும் உள்ள தன் சீடர்களைப் பார்த்தார்.

 ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு பிடித்தார். ஆகவே புத்தர் அந்த வியாபாரியைப் பார்த்து,“நான் எதற்காக உங்களை மன்னிக்க வேண்டும் ? நீங்கள் எதுவுமே செய்யாமல் இருக்கும் போது, எதற்கு இந்த மன்னிப்பு ? நீங்கள் என்ன தப்பு செய்தீர்கள் ? நான் எதற்காக உங்கள் நடத்தைக்கு மன்னிக்க வேண்டும் ? என்றார்.

அந்த வியாபாரி, “நேற்று நான் இங்கு வந்தேன்; என்னுடைய கோபத்தால் உங்கள் மீது எச்சில் உமிழ்ந்தேன்; அந்த மனிதன்தான் நான்; அந்த செயல் செய்ததும் நான்தான்” என்று பதில் கூறினான். 
    
புத்தர்,“நேற்று உன்னால் அவமானப்பட்ட அந்த மனிதர் இப்போது இங்கு இல்லை ; நான் எப்போதாவது உன்னால் எச்சில் உமிழப்பட்ட அவரை சந்திக்க நேர்ந்தால், அவரிடம் உன்னை மன்னிக்கும்படி கூறுகிறேன்“ என்றார்.

 எனக்கு இந்தக் கணத்தில் என் முன் நிற்கும் இந்த மனிதன் நீ வியக்கத்தக்க வகையில் எந்த தவறும் செய்யாதவன்.

நம் வாழ்க்கையில், எப்போது ஒருவரை நாம் உண்மையாக மன்னிப்போம் ?
 உண்மையான மன்னிப்பு என்பது, நாம் ஒருவரை மன்னிக்கும் போது, அவர் மன்னிக்கப்பட வேண்டியவர் என்பதை யாரும் அறியாமல் மன்னிக்க வேண்டும். தன் செயலுக்கான குற்றவுணர்வு, அவரைப் பாதிக்காதவாறும் இருக்க வேண்டும். இதுதான் மன்னிக்கும் தன்மையின் சரியான வழிமுறையாகும்.
  நாம் ஒருவரை மன்னித்து விட்டு, அந்த தவறை அவருக்கு திரும்பவும் ஞாபகப்படுத்தி ; எப்போதும் அவரை குற்றவுணர்வுக்கு ஆளாக்குவது என்பது, உண்மையிலேயே நாம் அவரை இதுவரை மன்னிக்கவில்லை என்றாகி விடும்.
 ஒருவர் செய்த தவறை, அவர் உணரச் செய்வது மட்டுமே அவருக்கு நாம் கொடுக்கும் போதுமான தண்டனையாகும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல். – என்ற வள்ளுவரின் வாக்கும்,

“மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில்" என்ற கூற்றும் இந்த மன்னிக்கும் தன்மையின் சிறப்பைப் பற்றியே கூறுகின்றன. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...