முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு உத்வேகம் தரும் நேர்காணல்

 
ஒரு முறை ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில்,  காலியாக இருக்கும் வேலை ஒன்றிற்காக, ஒரு நேர்முகப் பேட்டி  நடத்தினார்கள்.  அதிகமான பேர்  தங்களது கல்வி  மற்றும் அனுபவ சான்றிதழ்களோடு நேர் முகப் பேட்டிக்கு வந்தனர். 

 ஆனால், அங்கு பேட்டி நடத்தும் அதிகாரிகள் சிறிது வித்தியாசமான முறையில் கேள்விகள் கேட்டனர்.
நேர்முகத் தேர்வுக்கான மணி ஒலித்தது.    பியூன் முதல் நபரை அழைத்தார். 

 அந்த இளைஞன் தன்னுடைய  சான்றிதழ்களுடன் அந்த அறையை நோக்கிச் சென்றான்.  கதவைத் திறந்து கொண்டே,  உள்ளே நுழைய அனுமதி கேட்டான்.  அதிகாரி வரலாம் என பதில் சொன்னார். அந்த இளைஞன் நன்றி கூறி விட்டு, உள்ளே நுழைந்து அந்த அதிகாரியின் முன்னே இருந்த  நாற்காலியில் அமர்ந்தான்.
அந்த அதிகாரி  அவனது சான்றிதழ்களை வாங்கி பார்த்து விட்டு மிக நல்லது என்றார். 
   
 நான் உங்களிடம்  இப்போது ஒரு நிகழ்ச்சி பற்றி கூறுகிறேன் என்றார். இரண்டே இரண்டு இருக்கைகள் உள்ள ஒரு காரை  ஓட்டிக் கொண்டு நீங்கள் ஒரு இடத்திற்குப் போய்க் கொண்டு இருக்கிறீர்கள்.  ஒரு  பேரூந்து நிறுத்தம் அருகே  நீங்கள் வரும் போது, அங்கு  மூன்று பேர் நிற்பதைப்  பார்க்கின்றீர்கள்.     
 அதில் ஒருவர் சுமார் 90 வயதான பெண் மணி.  அவள் நிலைமை  மிகவும் மோசமாக இருந்தது.  அவள் சிகிட்சைக்காக  உடனே மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும்;  இல்லை எனில் இறந்து விடுவாள்;  மரணத் தறுவாயில் இருக்கும் நிலை. 

இரண்டாவது,  உங்களது உற்ற நண்பர்.  அவர் உங்களுக்கு  நிறைய உதவிகள் செய்தவர்.  இன்று நீங்கள் இவ்வளவு தூரம் உயர்ந்த நிலைமைக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர். 

மூன்றாவது,  உங்களை அன்போடு நேசிக்கும், உங்கள்  பெண் சினேகிதி. ஆனால் உங்கள் காரில்,  ஒருவருக்குத்தான் இடம் இருக்கிறது. நீங்கள் யாருக்கு இடம் கொடுப்பீர்கள்?  என்று கேட்டார்.
அந்த இளைஞன் கண நேரம் சிந்தித்து விட்டு   சார், “நான் சினேகிதிக்குத்தான் காரில் இடம் கொடுப்பேன்” என்றான். 

அந்த அதிகாரி,“ நீங்கள் அந்த இருவருக்கும், உதவி செய்யாமல் இருப்பது தவறுதானே?”  என்றார்.

 அதற்கு,  அந்த இளைஞன், “இல்லை சார்.  அந்த வயதான பெண் இன்றோ அல்லது நாளையோ  இறப்பது உறுதி என்றாகி விட்டது.  என்னுடைய நண்பனை நான் எப்போதாவது சந்தித்துக் கொள்ளலாம்.  நான் இப்போது  என் சினேகிதியை விட்டு விட்டால்,  அவளை நான் மீண்டும் பார்க்கவே முடியாது” என்றான்.

அந்த அதிகாரி புன்சிரிப்போடு,  “உன்னுடைய நேர்மையான பதில்களைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீ  இப்போது போகலாம் “ என்றார். நன்றி தெரிவித்து விட்டு அந்த இளைஞன் வெளியே வந்தான்.
அடுத்த நபரை அனுப்பும்படி பியூனிடம் கூறினார்.  இவ்வாறாக வந்த அனைவரிடமும்  இதே கேள்விதான், கேட்கப்பட்டது.  அனைவருமே, வெவ்வேறான பதில்களை கூறினார்கள். 
சில பேர் வயதான பெண்மணியை அழைத்துச் செல்வோம், என்றனர்;   சிலபேர்  நண்பனுக்குக் காரில் இடம் கொடுப்போம் என்றனர்;   மேலும் சில பேர்  சினேகிதிக்கு இடம் கொடுப்போம் என்றனர்.      

 இவ்வாறாக  நேர்முகத் தேர்வு,  அதிக நேரமாக நடந்து கொண்டு இருந்தது.
இதே கேள்வியை  அதிகாரி  நேர்முகத் தேர்விற்கு வந்த ஒரு நபரிடம் கேட்ட போது, “ சார், நான் காரின் சாவியை என் நண்பனிடம் கொடுத்து, அந்த வயதான பெண்மணியை  ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு,  காரை உன் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ.  நான் பிறகு காரை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு என் சினேகிதியுடன்  நான் பேரூந்தில் செல்வேன்” என் பதில் கூறினான்.
இந்த பதிலைக் கேட்டவுடன், அந்த அதிகாரி தன் இருக்கையை விட்டு எழுந்து,  அந்த இளைஞரின் கையைக் குலுக்கினார்.  புன் சிரிப்போடு,  “நீங்கள் மிகச் சிறந்தவர். உங்களை நான் இந்தப் பணிக்கு  தேர்ந்தெடுத்து விட்டேன்”  என்றார். 

 மிகவும் நன்றி சார்,  என்று கூறி விட்டு அந்த இளைஞன் மிகவும் சந்தோஷமாக  அறையை விட்டு வெளியே வந்தான்.
இறுதியாக அந்த நேர்முகத் தேர்வு ஒரு முடிவுக்கு வந்தது.
சில நேரம் நாம்  ஒரு பிரச்சனையை  முடிவுக்குக் கொண்டு வர,  அந்த பிரச்சனையின்  ஒரே ஒரு அம்சத்தை மட்டும்தான் பார்க்கிறோம்.  அதே வேளையில்,  அந்த பிரச்சனையின்  தீர்வானது, நாம் அனைத்து அம்சங்களையும்  ஒட்டு மொத்தமாக கவனித்துப் பார்த்தால் மட்டுமே கிடைக்கும்.
வாழ்க்கையில்  ஒருவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல்,  எல்லோரையும்  அரவணைத்துச் செல்ல வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...