முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயணம்

ஒரு ஞாயிறு காலை, ஒரு பெரிய மனிதர் தனது பால் கனியில் அமர்ந்து, சூரிய ஒளியை ரசித்துக் கொண்டே, காஃபி குடித்துக் கொண்டிருந்தார்.  
 
அவரது கவனத்தை ஒரு சிறிய எறும்பு ஈர்த்தது. தன்னை விட எத்தனையோ மடங்கு  பெரியதாக இருக்கும் இலை ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்த பால்கனியின்  ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு,  சென்று கொண்டிருந்தது.    இந்த மனிதர்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதனை கவனித்துக் கொண்டு இருந்தார்.  அந்த எறும்பு தன்னுடைய பயணத்தில்,  நிறைய இன்னல்களை சந்திக்க வேண்டி இருந்தது. அது பல தடவைகள்  நின்றும்,  திரும்பியும்  தன்னுடைய இடத்தை அடைய, தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருந்தது.
 
அந்த பால் கனி தரையில் ஒரு இடத்தில் ஒரு சிறிய கீறல் இருந்தது.  அந்த இடம் வந்தவுடன்  எறும்பு சிறிது நேரம் நின்றது. அந்த சூழ்நிலையை  அதாவது அந்தக் கீறலைத் தாண்டுவது எப்படி என்பது பற்றி, ஆராய்ந்தது.

   பிறகு  அந்த இலையை  அந்த கீறலின் மேல் வைத்தது;  அந்த இலையின் மேல் ஏறி அடுத்த பக்கம் வந்தது.   பிறகு இலையை எடுத்துக் கொண்டு, மீண்டும் தொடர்ந்தது.
 
கடவுளின் படைப்பில்,  அந்த மிகச் சிறிய எறும்பின் புத்தி சாலித்தனம்  அந்த மனிதரின் கவனத்தை ஈர்த்தது.  
இந்த சம்பவம் அந்த மனிதரை பயபக்தியோடு,  படைப்பின் அதிசயத்தைப் பற்றி சிந்திக்க வைத்தது.
இது படைத்தவனின் திறமையைக் காட்டியது. 
உருவத்தில் மிகமிகச் சிறியதாக உள்ள  இந்த எறும்புக்கும், ஒரு மூளை இருக்கிறது.     சிந்தனை செய்ய; சூழ் நிலையை சமாளிக்க; காரணங்களைக் கண்டறிய; வெளிப்படுத்த;  அதற்கு மேலாக கஷ்டங்களை எதிர்கொண்டு முன்னேற அந்த மூளை வேலை செய்கிறது.
சிறிது நேரம் கழிந்ததும், அந்த எறும்பு தன் இருப்பிடத்தை நெருங்கியது.  தரையில் இருக்கும் ஒரு மிகச் சிறிய துவாரம் வழியாக, அது தன் இருப்பிடத்தின் உள்ளே நுழைய வேண்டும். அதன் இருப்பிடம் தரையில் அடியில் இருந்தது.  
 
  இந்த சின்னஞ் சிறிய துவாரத்தின் வழியாக  இந்த எறும்பால், எப்படி இந்த இலையைக் கொண்டு செல்ல முடியும்?  இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு தன் இருப்பிடம் வரை கொண்டு வந்ததை உள்ளே கொண்டு போக முடியவில்லையே என நினைத்தார்.

 அந்த சிறிய எறும்பு, நிறைய துன்பங்களை அனுபவித்து,  கஷ்டப்பட்டு,  தன்னுடைய திறமையைக் காட்டி, அறிவைப் பயன்படுத்தி அந்த இலையை எடுத்து வந்த பின்பும்,  கடைசியில்  தன் வீட்டிற்கு  வெறும் கையோடுதான் திரும்பியது.     
அந்த எறும்பு இவ்வளவு பெரிய இலையை, தன் வீட்டு சின்னஞ் சிறு துவாரம் வழியாக  கொண்டு செல்ல முடியுமா என்பதை முதலில் நினைத்துப் பார்க்கவில்லை.    தன்னுடைய சவால்கள் நிறைந்த பயணத்தின் முடிவு இப்படி ஆகும் என்றும்  அது எதிர்பார்க்கவில்லை. 

 அந்த இலை அதற்கு உதவாமல் ஒரு சுமையாகவே மாறி விட்டது.  அதைப் பற்றி  எறும்புக்கு  எவ்விதமான கவலையும் இல்லை.
சவால்களும், கஷ்டங்களும் நம் வாழ்க்கையில் வரும்போது,  இந்த சிறிய எறும்பு போல், நம்மால் முழு நம்பிக்கையோடும்,தைரியத்தோடும், அவற்றை எதிர்கொள்ள முடியுமா? என்று வியப்படைந்தார்.  
தன்னுடைய பயணத்தின் இறுதியில் அந்த எறும்பு இந்த இலையால் தனக்கு எந்த பயனும் இல்லை.  அது வெறும் சுமையாகத்தான் இருந்தது என்று  அதை விட்டுவிட்டு  வேகமாகச் சென்றது.  
நாம், நமது வாழ்க்கை எனும் பயணத்தில் அதிகமான ஆசைகளை சுமக்கிறோம்.  அதனை நிறைவேற்றவும் முயற்சி செய்கிறோம்.

 ஆசைகளை பூர்த்தி செய்வதில்தான் நம் மகிழ்ச்சி இருக்கிறது.    ஆசைகள் நிறைவேறாத போது நமக்கு ஏமாற்றம் வருகிறது. சில நேரங்களில்,  இந்த ஆசைகள் நமக்கு சுமையாகி, நமது பயணத்தின் முடிவை நாம் அடையும் வழியில், தடைகளாக இருக்கின்றன.  அந்த எறும்பைப் போல, இதனை நாம் எளிதாக விட்டுவிட்டு முன்னேறிச் செல்ல முடியுமா?
நமது வாழ்க்கையின் நோக்கம் என்ன?  
நமது வாழ்க்கையில் நாம் என்ன விரும்புகிறோம்?
இந்த எண்ணங்களில்,  அவர் ஆழ்ந்து மூழ்கி இருக்கும் போது, திடீரென்று வாசல் மணி ஒலித்தது.  காஃபி கப்புடன் அவர், உள்ளே சென்றார்.
வெளியில் இருந்து பார்க்கும் போது, எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறது. ஆனால் அவருள்ளே சுழல் காற்று போல,  புதிய எண்ணங்கள் எழுந்து கொண்டு இருந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...