முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோதுமை தானியத்தின் மந்திரம்

முன்னொரு காலத்தில் அமர்சென் என்ற ஒரு புத்திசாலி மனிதர், ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார்.     அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.  அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவரவர் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து  வந்தனர்.

 அமர்சென்னுக்கு வயதாகி விட்டது.   அவரது மனைவியும் இறந்து விட்டாள்.  தன்னுடைய பணம்  சொத்துக்களை  முறைப்படி,  கொடுக்க தீர்மானித்தார்.     இந்த முடிவுக்கு வந்த பிறகு,  தன்னுடைய மகன்கள், மருமகள்களை அழைத்தார்.  ஒவ்வொரு ஜோடிக்கும்  அதாவது ( ஒரு மகன், மருமகள் இவ்வாறு நான்கு ஜோடிகள்). 

  ஒவ்வொருவருக்கும் ஐந்து கோதுமை தானியங்களைக் கொடுத்தார்.  எண்ணி  ஐந்தே ஐந்து  கோதுமைகள் தான்.  நான் இப்போது, தீர்த்த  யாத்திரை செல்கிறேன்.   நான்கு வருடங்கள் கழித்து  திரும்பி வருவேன்.  நான் திரும்பி வரும் வரை இந்த கோதுமைத் தானியங்களை யார் முறைப் படி, கவனமாக வைத்துள்ளார்களோ,  அவர்களுக்குத்தான் என்னுடைய சொத்து முழுவதும் சேரும்,  என கூறி விட்டு சென்றார்.  

 முதல் மகனும், மருமகளும்  இந்த வயதான கிழவருக்கு என்ன வாயிற்று.   நான்கு வருடங்களாக இந்த ஐந்து கோதுமைகளைப் பற்றி யார் ஞாபகம் வைத்துக் கொள்ளப் போகிறார்கள்.  எப்படியும்  நாம்தான்  மூத்தவர்கள்.  சொத்துக்கு முதல் உரிமை நமக்குத்தான் என்ற எண்ணத்துடன்,  அந்த கோதுமைத் தானியங்களை தூக்கி எறிந்து விட்டனர். 

இரண்டாவது மகனும், மருமகளும்  இந்த தானியங்களைப் பாதுகாத்து வைப்பது  மிகவும் கஷ்டம் இந்த தானியங்களை நாம் சாப்பிட்டால் இதில் ஏதோ நல்லது இருக்கும். அப்பாவும் மகிழ்ச்சி அடைவார்.  திரும்பி வந்ததும்  நம்மை வாழ்த்தி,  சொத்து முழுவதும்  நமக்குக் கொடுப்பார் என முடிவு செய்து, அந்த தானியங்களை இருவரும் சாப்பிட்டனர்.
மூன்றாவது மகனும், மருமகளும் மிகவும் மத நம்பிக்கையும்,  கடவுள் நம்பிக்கையும் உடையவர்கள்.    கோவிலில் இருக்கும்  கடவுள் சிலைகளை பாதுகாப்பது போல், இந்த தானியங்களையும்  நாம் பாதுகாத்து  வைத்து,  அப்பா வந்தவுடன் பத்திரமாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தனர்.  
 
 நான்காவது மகனும் மருமகளும்  இதைப் பற்றி அறிவு பூர்வமாக சிந்தனை செய்தார்கள்.  அவ்விருவரும்  அந்த ஐந்து கோதுமை தானியங்களையும், பூமியில் விதைத்தனர்.     செடிகள் வளர்ந்தன.  கொஞ்சம் கோதுமைகள் கிடைத்தன.  அதையும் அவர்கள்  விதைத்தனர்.  இவ்வாறு  ஒவ்வொரு வருடமும்,  கோதுமை தானியங்களின் அளவை  அதிகரித்தனர். 

  அந்த ஐந்து கோதுமைகள்,  இப்போது  ஐந்து   சாக்குகள் ஆகி,  இருபத்தைந்து சாக்குகள் ஆகி,  பிறகு  ஐம்பது சாக்குகளாக அதிகரித்து விட்டன.
நான்கு வருடங்கள் கழிந்தன.  அமர் சென் திரும்பி வந்தார்.  நான்கு ஜோடிகளையும் அழைத்தார்.  கோதுமையை அவர்கள் என்ன செய்தனர்,  என்பதைப் பற்றி கேட்டார். 

 நான்காவது மகனிடமும் மருமகளிடமும் அவர் கேட்ட போது  அந்த மகன், “அப்பா,  நீங்கள் கொடுத்த அந்த கோதுமைகள்,  இப்போது 50 சாக்கு மூட்டை கோதுமைகளாக  மாறிவிட்டன.  அவற்றை பத்திரமாக உணவுக் களஞ்சியத்தில் வைத்து இருக்கின்றோம்.   அவை இப்போது, உங்களுக்குத்தான் என்றனர். 

 இதைக் கேட்டவுடன் அமர்சென்  மகிழ்ச்சி அடைந்து உடனே பணப் பெட்டியின் சாவிகளை நான்காவது  மகன், மருமகளிடம் கொடுத்தார்.  நீங்கள் இருவரும்தான்  என்னுடைய சொத்துக்கு உண்மையான வாரிசு என்றார்.

ஒரு சின்னஞ்சிறு ஆரம்பம்,  எந்த அளவு ஒரு பெரிய நிலையில் தன்மை மாற்றம் அடையச் செய்ய முடியும் என்பதற்கு இந்த ஐந்து தானிய விதைகள், ஒரு அடையாளம்.  அதே போல, சின்னஞ்சிறு பொறுப்பு,  என்பதை  கையில்  இருக்கும் ஆதாரத்தை வைத்து, மிகச் சிறந்த அளவுக்கு நிறைவேற்ற முடிகிறது என்றால், அது அற்புதமான விளைவுகளை எடுத்துக் கொண்டு வரும் என்பதுதான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...