முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறம் மற்றும் கடமை

முன்னொரு காலத்தில் நல்ல குணமும் ஒழுக்கமும் நிறைந்த மனிதன் ஒருவன், தன் மனைவி குழந்தைகளோடு புனித யாத்திரை மேற்கொண்டார்.  பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.  புனித யாத்திரையை அவர் மேற்கொண்ட காலமோ, கடுமையான கோடை காலம் ஆகும். 
பல மைல்கள் தூரம் கடந்த பிறகு,  அவர்கள் கொண்டு வந்து இருந்த தண்ணீரும் காலியாகி விட்டது.  குடும்பமே தண்ணீர் தாகத்தால் வருந்தியது.  கடுங்கோடை என்பதால்  வழியில் எங்குமே தண்ணீர் இல்லை.  குழந்தைகள் தாகத்தால் தவித்தனர்.  இந்த மனிதனுக்கோ எப்படி இந்த பிரச்சனையைத் தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தார்.  எந்த வழியும் தெரியாமல்,  கடவுளிடம் முறையிட ஆரம்பித்தார்.  கடவுளிடம்,  ஓ பிரபுவே!  தயவு செய்து இந்த சூழ்நிலையை சமாளிக்க நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார்.  சிறிது நேரத்தில், கண்ணுக்கு எட்டிய தூரத்தில், ஒரு சந்நியாசி ஓரிடத்தில் உட்கார்ந்து  தியானம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.  அவரிடம் சென்று தன் பிரச்சனையைக் கூறினார்.  சந்நியாசி அவரிடம்,  “இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் ஒரு சிறிய ஆறு வடக்கு நோக்கி பாய்ந்து செல்கிறது.  நீ அங்கு சென்று,  உங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளலாம்” என்றார்.  அந்த மனிதன் இதைக்  கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.   சந்நியாசிக்கு நன்றி கூறினான்.
அவனது மனைவியாலோ  அல்லது குழந்தைகளாலோஇனிமேல்  ஒரு அடி கூட  நடக்க முடியாத நிலையில் இருந்தனர்.  அவர்களை அங்கேயே இருக்க வைத்து விட்டு, அந்த மனிதன் தண்ணீர் கொண்டு வரச் சென்றான். தண்ணீரை எடுத்துக் கொண்டு திரும்பி வரும்போது, அவன் எதிரே ஐந்து பேர்கள் வந்தனர்.  அவர்களும் கடுமையான தாகத்தால், தவித்த படி இருந்தனர்.  அந்த மோசமான நிலையில்,  அவர்களைப் பார்த்த, அந்த நல்ல மனிதன் தான் கொண்டு வந்த தண்ணீர் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்து விட்டு  மீண்டும் ஆற்றுக்கு சென்றான்.
இரண்டாவது முறையாக தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் போது, திரும்பவும் தாகத்தால் தவிக்கும் சில பேரை பார்க்கிறான்.   திரும்பவும் தண்ணீரைக் கொடுத்து விடுகிறான்.  மூன்றாவது முறையாக தண்ணீரை எடுத்துக் கொண்டு  தன் குடும்பத்தினரிடம் வருகிறான்.  மனைவியும்,  குழந்தைகளும் மயக்கம் அடைந்து கீழே விழுந்து கிடக்கின்றனர்.  உணர்விழந்த நிலையில் கிடக்கும் அவர்கள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பிப் பார்க்கிறான்.  அவர்கள் விழிக்கவே இல்லை. 
அவன் அழுது கொண்டே,  அந்த சந்நியாசியிடம் ஓடிச் சென்று,  அவர் பாதங்களில் விழுந்து கதறுகிறான்.  “நான் என்ன பாவம் செய்தேன்?  என் குடும்பம், இந்த நிலையில் இருக்கிறதே!  நான் தாகத்தில் தவிக்கும் மற்றவர்களுக்கு உதவிதானே செய்தேன்;  அது ஒரு புனிதமான செயல்தான்;  என் குடும்பத்தினரைக் காப்பாற்றுங்கள்”.
சந்நியாசி அவனைப் பார்த்து, “ஓ புண்ணிய ஆன்மாவே!  நீ ஆற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை, தாகத்தோடு வந்த  மற்றவர்களுக்குக் கொடுத்து உன் பாத்திரத்தைக் காலிப் பாத்திரம் ஆக்கினாய்.  இதிலிருந்து,  உனக்கு என்ன நன்மை கிடைத்தது?”
அந்த மனிதன்,  “உதவி செய்வதால்  என்ன கிடைக்கும் என்பதை நான் ஒரு போதும் நினைத்துக் கூட பார்ப்பது இல்லை.  எனக்கு சரி என்று நான் உணர்ந்ததை செய்தேன்.  எந்த சுய நலமான எண்ணமும் எனக்கு இல்லை” என்றான். 
அதற்கு சந்நியாசி, “இந்த மாதிரி நீ செய்த நல்ல காரியங்களுக்கும்,நல்ல கருத்துக்களுக்கும்என்ன பயன் கிடைத்தது?  நீ உன்னுடைய  கடமையை நிறைவேற்றாமல்,  மற்றவர்களுக்கு உதவி செய்வது எப்படி?  உன்னுடைய மனைவி, குழந்தைகளுக்கு நீ உதவி செய்யாமல் மற்றவர்களுக்கு  உதவி செய்வது எப்படி நன்மை தரும்?  நல்ல செயல்களை செய்வதற்கு நீ  இன்னும் சரியாக கற்க வில்லை.   நான் செய்த மாதிரி, நீ செய்திருக்க வேண்டும்” என்றார்.
எப்படி என்று அந்த மனிதன் ஆவலாகக் கேட்டான்.  அதற்கு சந்நியாசி அவனைப் பார்த்து,“நீ என்னிடம் தாகத்தைத் தணிக்க வழி கேட்ட போது, நான் உனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக ஆற்றுக்குச் செல்லும் பாதையை காட்டினேன். இது போல் உன்னிடம் தாகமாக வந்தவர்களை நீயும் ஆற்றுக்குச் செல்ல வழி காட்டி இருக்க வேண்டும்.  அவர்களும் ஆற்றில் சென்று தாகத்தைத் தணித்து இருப்பார்கள்.   யாருமே, மற்றவர்களுக்காக, தங்கள் பாத்திரங்களை காலியாக்க மாட்டார்கள்.” இந்த அறிவுரைகளை அவனுக்கு வழங்கி விட்டு,  அவனது குடும்பத்தினர்களுக்கும் ஆசிகளைக் கொடுத்து விட்டு,  அவர் மறைந்து விட்டார்.
அந்த மனிதன் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டான்.

   அவனுக்கு இப்போது எல்லாம் தெளிவாகப் புரிந்து விட்டது.  நம்முடைய பொறுப்புக்களைக் கவனிக்காமல்,  எந்த நல்ல காரியத்தையும் செய்வதில் அர்த்தம் இல்லை என்பதை புரிந்து கொண்டான்.  நமது கடமைகளை நன்கு செய்து  அதன் மூலம்  மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருந்து, நல்ல வழிமுறையையும்  அவர்களுக்குக் காட்ட வேண்டும்.   விவேகத்தோடு நாம் உதவி செய்ய வேண்டும்.  கடவுளின் பாதையையும்,  உண்மையின் வழியையும்  மற்றவர்களுக்குக் காட்டுவதே  மிகச் சிறந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...