முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விசிலை அடிக்காதீர்

நான் ஒரு பள்ளியில், விளையாட்டு மைதானத்தில் நடக்கும் ஒரு சாதாரண கால் பந்து போட்டியை கவனித்தேன்.
நான் உட்கார்ந்தவுடன், அங்கிருந்த பையன் ஒருவனிடம் ஸ்கோர் என்ன என்று கேட்டேன்.
ஒரு புன்சிரிப்போடு அவன் பதில் கூறினான், “அவர்கள் எங்களை விடவும், 3-0 என்ற கணக்கில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் நான் சொன்னேன்,” உண்மையாகவா !”
“ நான் கூறினேன், உன்னைப் பார்த்தால் தைரியத்தை இழந்தவன் போல தெரியவில்லையே! அவனை, ஆறுதல் படுத்த முயற்சி செய்யும் விதமாக, நான் இதனை கூறினேன்.  
“தைரியத்தை இழக்க வேண்டுமா?” அந்த பையன் என்னைப் பார்த்து திகைப்பான பார்வை கொண்டு கேட்டான்.
“ நான் ஏன் தைரியத்தை இழக்க வேண்டும்; அந்த நடுவர் இன்னமும் கடைசி விசிலை அடிக்கவில்லையே?”
அந்த குழுவின் மீதும், மேலும் அங்கு பங்கேற்கும் மேனேஜர்களிடமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் நிச்சயமாக முறியடித்திடுவோம்.“
உண்மையாகவே, அந்த போட்டி ஒரு முடிவுக்கு வந்தது. 5-4 என்ற கணக்கில் ஸ்கோர்; அந்த பையனுடைய குழு வெற்றி பெற்றது.
அவன் போகும் போது, அழகான புன்சிரிப்புடன் சென்றான்; அவன் என்னைப் பார்த்து, கைகளை மென்மையாக அசைத்தான். நான் அகலமாகத் திறந்த வாயோடு, ஆச்சரியம் அடைந்தேன். என்னவிதமான நம்பிக்கை; என்னவிதமான அழகு மிளிரும் நம்பிக்கை!
அன்று இரவு நான் வீட்டிற்கு திரும்பிய பிறகும் கூட, அவனது கேள்வி, என்னிடம் திரும்பதிரும்ப வந்து கொண்டு இருந்தது.“நான் ஏன் தைரியம் இழக்க வேண்டும்? அந்த நடுவர் கடைசி விசிலை அடிக்கவில்லை எனும் போது?“
வாழ்க்கை என்பதும் ஒரு விளையாட்டு தான். இறுதி வரைக்கும் இதனோடு போராட்டம் செய்தே ஆக வேண்டும்.
ஏன் தைரியம் இழக்க வேண்டும், இன்னும், அங்கே வாழ்க்கை இருக்கின்ற ஒரு நிலையில்?
ஏன் தைரியம் இழக்க வேண்டும், அங்கே இன்னமும் உங்களது இறுதி விசில் அடிக்கவில்லை என்னும் போது?
அதில், உண்மை என்னவென்றால், பெரும்பாலான மக்கள், தாமாகவே, அந்த கடைசி விசிலை அடித்து விடுகின்றார்கள் என்பதுதான்.
ஆனால், அங்கே வாழ்க்கை என்ற ஒன்று இருக்கின்றது என்னும் வரைக்கும், முடியாதது என்று எந்த ஒன்றுமே இல்லை; மேலும் உங்களுக்கு எந்த ஒரு பொழுதுமே, அது தாமதமானது கிடையாது.
பாதி நேரம் என்றால், அது, முழுமையான நேரம் அல்ல.
நீங்களாகவே, அந்த விசிலை அடிக்காதீர்கள்!
அன்பில், அங்கே எதிர்பார்ப்புக்கு இடமே இல்லை; ஆனால் நன்றி மட்டுமே இருக்கிறது. அதனால் தான் அன்பு மனித இனத்தின் பெருந்தன்மையின் உச்சம் என்றாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...