முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கேள்வி

 *வாசிப்பதற்கு முன்பாக… அன்போடு உங்கள் கண்களை மென்மையாக மூடுங்கள்… உங்களுடைய இதயத் துடிப்பானது ஒழுக்கத்தை விட்டு வெளியேறினால், என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்யுங்கள்....தொடர்ந்து வாசியுங்கள்.*


**


 முன்னொரு காலத்தில் ஒரு குருகுலத்தில், ஆச்சார்யா சுமத், தமது சீடர்களோடு வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் அறிவுத் திறமை கொண்டு, மேலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கக் கூடியவராகவும் இருந்து வந்தார். 

 ஒரு நாள் பாடம், முடிந்த பிறகு, அவருடைய சீடர்களுள் ஒருவரான வர்ட்டெண்ட் என்பவர் குருவிடம் கேட்டார், “ஆச்சர்யா! அறிவுத் தன்மையின் கூர்மை என்பது கற்றுக் கொண்டு இருப்பதன் அடிப்படையைச் சார்ந்த ஒன்று. இது இப்படி இருந்த போதிலும், நீங்கள் ஏன், எப்போதும், நமது வாழ்க்கை முழுவதுமே கடுமையான ஒழுக்கத்தை திடமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று, பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்?“

 ஆச்சார்யா சுமத் பதிலளித்தார்,“ நேரம் வரும் போது, உங்களுக்குரிய பதில் கிடைக்கும்.”

 சில நாட்களுக்குப் பிறகு, ஆச்சார்யாவும், அவரது எல்லா சீடர்களும், நடை பயிற்சிக்காக வெளியே போனார்கள். நடந்து கொண்டு இருக்கும் போது, அவர்கள் அனைவரும், கங்கை ஆற்றின் கரையை அடைந்தார்கள். கங்கை ஆறு ஓடுவதையும், அதன் அலைகள் தெறிப்பதையும் பார்த்துக் கொண்டு இருந்த அனைவரும், அவற்றால் கவரப்பட்டார்கள்.  

 இதைப் பார்த்துக் கொண்டு இருந்த ஆச்சார்யா வார்டெண்டிடம் கேட்டார்,“ உனக்குத் தெரியுமா? எங்கே இருந்து இந்த கங்கை ஆறு தனது பயணத்தை ஆரம்பிக்கிறது; மேலும் எங்கே இது முடிவுறுகிறது?

 வார்டெண்ட் உடனே பதிலளித்தார்,“ ஆமாம் ஆச்சார்யா! கங்கா கோமுக்கில் இருந்து வருகிறது. மேலும் முடிவில் கங்கா சாகரில் ஐக்கியம் ஆகிறது.“

 பிறகு ஆச்சார்யா ஆற்றின் கரையை நோக்கி சுட்டிக் காட்டிக் கொண்டு கேட்டார்,” சரிதான். கங்கையின் இந்த இரண்டு கரைகளும் அங்கே இல்லாமல் இருந்தால், அதனால், இவ்வளவு நீண்ட தூரம் பயணித்திருக்க முடியுமா?”

 “ வார்ட்டண்ட் உடனே பதிலளித்தார்,“ இல்லை! நிச்சயமாக இயலாது. ஏனென்றால், ஆற்றின் இந்த கரைகள் இல்லா விட்டால், பிறகு அங்கே, கங்கையின் தண்ணீர் எல்லா இடமும் சிதறிப் போய் விடும்; மேலும் மக்களுக்கு, கங்கையில் இருந்து கிடைக்கும் நன்மைகள், கிடைக்காமலேயே போய் விடும். கங்கை ஆறு அதன், இரண்டு கரைகளுக்கும் உள்ளாக ஓடும் போது மட்டுமே, மக்கள், அதனிடம் பயன் பெற்றிட முடியும். “

 வாராண்டின் பதிலால் மகிழ்ச்சி அடைந்த ஆச்சார்யா கூறினார்,“நீ அன்று கேட்ட கேள்விக்கான பதில் இதுதான். மாணவப் பருவத்தில் அங்கே ஒழுக்கம் இல்லாமல் இருந்தால், பிறகு அவனது வாழ்க்கையின் சக்தி முழுவதும் சிதறடிக்கப் பட்டு விடும்; மேலும் அவனுடைய ஆற்றல் வளம் முழுவதும், பயன்படாமலேயே போய் விடும். அந்த மாதிரியான மனிதனின் உடல் மற்றும் மனம் சோர்வுற்று, உயிரற்ற ஒன்றாக மாறிடலாம்.

 ஒழுக்கம் இல்லாமல், வாழ்க்கையின் நோக்கத்தை சாதிப்பது முடியாத ஒன்றாகும்; ஏனென்றால், அந்த மாணவனுக்கு படிப்பது என்றால், அது ஒழுக்கத்தில் இருந்து மட்டுமே கிடைக்கும் ஒன்றாகும்.”

 உங்களுடைய அன்பை ஒழுங்கு செய்யுங்கள்; உங்கள் ஒழுங்கு அன்பாக வேண்டியது இல்லை.

 *(தாஜியின் ‘விஸ்டம் பிரிட்ஜ்’ ஆங்கில நூல்).*

*தாஜி மகராஜ்:*


 *“ஒழுக்கம் என்பது, அதாவது நமக்கு உள்ளே இருந்து வரும், ஏதோ ஒன்றாகும். இது வெளிப்புறத்தில் இருந்து திணிக்கப்படுதல் கூடாது.“*



*ஹார்ட்ஃபுல்னெஸ் தியானம்.*💌
*HFN கதைக் குழு. ஜோத்பூர்.*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...